படித்ததில் பிடித்தது ஒருமுறை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சாரநாத் சென்றிருந்தார். அங்கிருந்த பார்வையற்ற ஒரு புத்த துறவி ஏன் இங்கே வந்திருக்கிறாய் என்று இவரை கேட்க புத்தரைப் பார்க்க வந்தேன் என்று இவர் பதில் கூற புத்தரையா..பார்க்க வந்திருக்கிறாய் என்று அவர் சிரிக்க .புத்தர் ஸ்தூபியை பார்க்க வந்திருக்கிறேன் என்று இவர் மீண்டும் பதில் கூற .ஏன் உங்கள் ஊரில் சுட்ட செங்கலில் சிலை இல்லையா என்று கேட்டார்.இல்லை ,இது ஆயிரம் வருடங்கள் பழமையானது.
அப்படியா உன்னுடைய வயது என்ன என்று கேட்டு,அதோடு மட்டுமில்லாமல் அருகிலிருக்கும் ஒரு பையில் இருந்து ஒரு சிறு கல்லை எடுத்து அவர் கையில் கொடுத்தார். இந்த கல்லிலும் புத்தர் இருக்கிறார் .ஆனால் இன்னும் இது சிற்பமாக மாறவில்லை. இது எங்கோ ஒரு மலையிலிருந்து உடைந்து வந்த ஒரு சிறு துகள் இப்பொழுது உன் கையில் ஒரு மலையே இருக்கிறது .கல்லை பார்த்து இருக்கிறாயா அது எப்பொழுதுமே அன்று மலர்ந்த மலர் போல் புதிதாக இருப்பதாகவே தெரியாது.
நீயும் ஒரு கல்லை இரண்டாக உடைக்கலாம் மீண்டும் நான்காக ,எட்டாக என்று கல்லை உடைத்துக் கொண்டே போகலாம் .அந்த கல்லுக்குள் என்ன இருக்கு என்று ஆராய முடியாது . அதுபோல தான் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் .நீ சிலைகளில் உற்றுப் பார்க்காமல் கற்களில் உற்றுப்பார் வடிவமற்ற புத்தரை நீ உணர்வாய் .
அதுபோலத்தான் மரங்களும் விறகு,மேஜை,வீடுகட்ட என பல வகையில் பயன்படும் .ஒரு கண் இல்லாதவனுக்கு ஊன்றுகோலாக இருக்கும் பொழுது அது பல மலைகளையும், கடலையும் தாண்டி வருகிறது. இதோ இந்த ஊன்றுகோல் என் ஒரு உறுப்பாகவே மாறிவிட்டது என்று கூறி சென்றார்.

சிந்தனையை தூண்டும் கதை
ReplyDeleteThank you Veena
ReplyDelete