சட்டை போட்ட மச்சான்
கண்ணீரை வர வச்சான்
உன் ஜோடி பூண்டோடு
தக்காளி வைத்து கொண்டாடு
நீயில்லா சமையலும் ருசிக்காது
விரத நாட்களில் உன்னை தவிர்த்து உனக்கு ஓய்வு தருகிறோம்
இதழ் இதழாக பிரிகையில் பதம் பதமாக விரிகிராய்
தேனோடு கூட்டு சேர்ந்து இருமலை போக்குகிறாய்
உன் சிறிய தங்கையும் ம(ரு)(க)த்துவம் நிறைந்தவள்
உன் மேல் வளரும் பச்சை கொண்டையும்
உணவாகிறாள்
கொத்து கொத்தாக வளர்ந்து தத்தனியாக பிரிகிறாய் பிரிவு உபசார விழா நடத்தாமல்
உன்னை மறுப்பார் இல்லை
வெறுப்பார் இல்லை
சாமானியன் உணவிலும் கெத்தாக பங்கேற்கிறாய்
மனிதன் உள்ளவரை உன்னை மறவோம்

அழகான பாடல் போல்👏
ReplyDelete