Kiruthika: *முடியாத ஒன்று தான் உண்டோ...?
முயற்சி துணையாய்
நிற்கும் போது...!..
*முடிக்க வேண்டும் -
என முடிவு செய்த பின்..
தடைகள் யாவும்
படிகளாகும்...
தடங்கல்கள் கூட
தயங்கி போய் -
தூரம் போகும்!...
*மூச்சு இருக்கும் வரை...
முயற்சியையும் சேர்த்தே சுவாசிப்போம் !!!..
Veena Shankar: வளர்ந்தது பாறையா? இல்லை மரமா?
எதற்கும் இடமுண்டு இப்புவியில் நம் மனதின் கண் ஈரமிருப்பதால்
பாறையும் பாடமானது அடுத்தவரின் வளர்ச்சியை தடுக்காததால்
மரமும் நிமிர்ந்தது
முயற்சியை கைவிடாததால்
எதுவும் பசுமையானது நம் எண்ணத்தின் பிரதிபலிப்பில்
Veena Shankar: கல்லுக்குள் ஈரம் உண்டு என்றோம்
கல்லும் கடத்திய ஈரத்தில் முளைத்த மரம், வெறுமையிலில்லை.
மண்ணும் மணியாய் தன் கடமையை செய்ய
மகத்துவம் தெரிந்தது நம் கண் முன்னே
Akhila: எனக்குத் தோன்றிய tanglish சிந்தனை🤩
தனி மரம் தோப்பாகாது-
but
நான் HOPE ஆவேன்🙌
Veena Shankar: எவருக்கும் ஓர் தனித்துவம் உண்டு என்பது உண்மையே,
நீண்டு வளரும் மரமும்
அகண்டு விரிந்து கிடக்கும் பாறையும் இயற்கையின் தனித்துவமே!
அதை காண்பதில் உண்டு நமக்கு பெருமிதமே!
Veena Shankar: இணைவோம் வளர்வோம்
செல்லும் பாதையில் பிளவு உண்டென்றாலும்
மார்க்கமும் உண்டு அங்கே பாதையை கடக்க
இறுகிய மனம் இலகினால்
Vidhya Nivash: நூலிழை போதும் முயற்சி என்ற வேர் முளைத்து வான் தொட!
பாறையே வந்து அழுத்தினாலும் என் கால்கள் பாறையானதே தவிர! பதிலுக்கு வான் கொடுத்த கொடையை கனியாக படைப்பேன்!
நிலையான அழுத்தம் இல்லாமல் எப்படி வெற்றி கனியை ரசிக்க ருசிக்க முடியும்!
Vidhya Nivash: உயிரற்றது, உயிருள்ளது!
எதுவும் எதையும் வீழ்த்தும் !
Kiruthika துடித்தெழு...
துளிர்த்தெழு ...!...
இடிப் போல்
இறக்கிடு
உன் -
முயற்சியை..!..
இடுக்கிலும்..
உயிர்த்தெழுவாய்..!..
உறுதியாய் .!!!....
Veena Shankar: இம்மியளவு கிடைத்த சுதந்திரத்தில் அடைந்த வெற்றிக் கொடி, மனிதருக்கு மட்டுமல்ல இங்கே சொந்தம், எனக்குமே என்கிறது இந்த மரம்

It was lovely reading all your thoughts about the pic. 👏👏👏👏 to Kiruthika, Veena, Akila and Vidhya.
ReplyDeleteThank you Anitha
Delete