Sunday, December 15, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



  கனவுகள் பல

அதில் நினைவுகள் சில

கஷ்டங்கள் பல 

அதில் அதிர்ஷ்டங்கள் சில

வருடங்கள் பல

அதில் தருணங்கள் சில

தவிப்புக்கள் பல

அதில் ரசிப்புக்கள் சில

காதல்கள் பல

அதில் நிராகரித்தவை சில

கட்டளைகள் பல 

அதில் நிபந்தனைகள் சில

கருணைகள் பல

அதில் வெறுமைகள் சில

சலிப்புக்கள் பல

அதில் அனுபவங்கள் சில

ஆரவாரங்கள் பல 

அதில் அழுகைகள் சில

கொடுமைகள் பல

அதில் உதித்தவை சில

பொறுமைகள் பல

அதில் உதிர்த்தவை சில

சிந்தனைகள் பல

அதில் நிறைவேறியது சில

மஞ்சங்கள் பல

அதில் அரங்கேறியது சில

வந்தவை பல

அதில் நிலைத்தவை சில

நோட்டுக்கள் பல

அதில் கறுப்புகள் சில

அகங்காரங்கள் பல

அதில் அழகானவை சில

ஆபத்தானவைகள் பல 

அதில் ஆராதனைகள் சில 

இயல்பானவைகள் பல

அதில் அரிதானவைகள் சில

மயக்கங்கள் பல

அதில் தயக்கங்கள் சில

சூழ்நிலைகள் பல

அதில் சுயநலம் சில


எப்படியோ எனக்கு வாய்ப்புகள் பல

அப்படியே என் வாழ்க்கையில் சில


இப்படிக்கு அவர்களில் ஒருத்தி


 துயில் கொள்ளா மயில் 

இல்ல இவள்

மையல் கொண்டே 

மதியும் மயங்கினாள்

மஞ்சத்தில் கூட தஞ்சம் கொள்ள

முடியாமல் 

சஞ்சலம் கொண்டாள் 

கைத்தலம் பற்றிட வருவான் விரைவில்

அவள் எதிர்பார்ப்பும்

கைகூடும் வரும் நாளில்

நாட்கள் நகர மறுத்தாலும்

அகவை கூடுதே

பூஞ்சிரிப்பினில் மயங்கும் வேளையில் 

பூமலரும் தருணம் வருமே

வாழ்வின் செருக்கு கொள்ள

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...