கனவுகள் பல
அதில் நினைவுகள் சில
கஷ்டங்கள் பல
அதில் அதிர்ஷ்டங்கள் சில
வருடங்கள் பல
அதில் தருணங்கள் சில
தவிப்புக்கள் பல
அதில் ரசிப்புக்கள் சில
காதல்கள் பல
அதில் நிராகரித்தவை சில
கட்டளைகள் பல
அதில் நிபந்தனைகள் சில
கருணைகள் பல
அதில் வெறுமைகள் சில
சலிப்புக்கள் பல
அதில் அனுபவங்கள் சில
ஆரவாரங்கள் பல
அதில் அழுகைகள் சில
கொடுமைகள் பல
அதில் உதித்தவை சில
பொறுமைகள் பல
அதில் உதிர்த்தவை சில
சிந்தனைகள் பல
அதில் நிறைவேறியது சில
மஞ்சங்கள் பல
அதில் அரங்கேறியது சில
வந்தவை பல
அதில் நிலைத்தவை சில
நோட்டுக்கள் பல
அதில் கறுப்புகள் சில
அகங்காரங்கள் பல
அதில் அழகானவை சில
ஆபத்தானவைகள் பல
அதில் ஆராதனைகள் சில
இயல்பானவைகள் பல
அதில் அரிதானவைகள் சில
மயக்கங்கள் பல
அதில் தயக்கங்கள் சில
சூழ்நிலைகள் பல
அதில் சுயநலம் சில
எப்படியோ எனக்கு வாய்ப்புகள் பல
அப்படியே என் வாழ்க்கையில் சில
இப்படிக்கு அவர்களில் ஒருத்தி
துயில் கொள்ளா மயில்
இல்ல இவள்
மையல் கொண்டே
மதியும் மயங்கினாள்
மஞ்சத்தில் கூட தஞ்சம் கொள்ள
முடியாமல்
சஞ்சலம் கொண்டாள்
கைத்தலம் பற்றிட வருவான் விரைவில்
அவள் எதிர்பார்ப்பும்
கைகூடும் வரும் நாளில்
நாட்கள் நகர மறுத்தாலும்
அகவை கூடுதே
பூஞ்சிரிப்பினில் மயங்கும் வேளையில்
பூமலரும் தருணம் வருமே
வாழ்வின் செருக்கு கொள்ள

No comments:
Post a Comment