Thursday, December 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


அலங்கார உடையில் பவனி 

அதுவே அவனின் பாணி 


பசியால் சுருங்கிய வயிறு

சினத்தை அடக்கவே மூக்காணாங்கயிறு 


ஜல்லிக்கட்டு காணும் வம்சம்

கும்பிடுகையில் தெய்வ அம்சம்


கொண்டவன் கையில் தஞ்சம்

நளின நடையும் கொஞ்சும்


கேட்டுப் பெறும் யாசகம்

உழைத்து வாழ் என்பதே வாசகம்


பின்னவன் சலங்கையொலி இயங்கும்

அறிந்தும் அறியாமலும் கண் மயங்கும்


புற அழகு கூட்டும் வளமை

உண்மை சொல்லும் அவன் மன வலிமை


கணிக்கும் யாவும் பொய்யே!

சிலநேரம்

எதையும் உணர்வது மெய்யே!


 அழகான வாழ்வுக்காக அவசியான நடிப்பு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...