அலங்கார உடையில் பவனி
அதுவே அவனின் பாணி
பசியால் சுருங்கிய வயிறு
சினத்தை அடக்கவே மூக்காணாங்கயிறு
ஜல்லிக்கட்டு காணும் வம்சம்
கும்பிடுகையில் தெய்வ அம்சம்
கொண்டவன் கையில் தஞ்சம்
நளின நடையும் கொஞ்சும்
கேட்டுப் பெறும் யாசகம்
உழைத்து வாழ் என்பதே வாசகம்
பின்னவன் சலங்கையொலி இயங்கும்
அறிந்தும் அறியாமலும் கண் மயங்கும்
புற அழகு கூட்டும் வளமை
உண்மை சொல்லும் அவன் மன வலிமை
கணிக்கும் யாவும் பொய்யே!
சிலநேரம்
எதையும் உணர்வது மெய்யே!
அழகான வாழ்வுக்காக அவசியான நடிப்பு

No comments:
Post a Comment