Sunday, December 8, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


துணைவி துணையாய் இல்லாமல்

மறைந்தாலும்

துயிலுகையில் மனம் மறுத்து போனதே

அவளின் ஒரு துளி

அன்பு கூட ஒளடதமாய் மாறுமே 

அண்மையில் ஊடலும்

தொலைவில் நினைவும் உறவில் உண்டே

தனிமை என்பதில்லை என்றும் என் மனதில்

அவள் நினைவால் 

என நா செப்பினாலும்

நானும் என்னை நானே 

மறந்தேனே 

மறுப்பதும் மன்றாடுவதும்

வெறுத்து பேசியதால் தானே

மறைத்து வைத்த காதல் இன்று இனிக்காமல் 

இளைத்ததே 

வருவாள் வருவாள்

நான் நினைக்கும் வரை

மறவேன் மறவேன் என்பேன் 

மறமே காதலில்

வீழ்ந்ததால்

விருந்தாக்கிய நாட்களை விட 

வீழ்ந்த நாட்கள் மிகையே

நெஞ்சம் புகுந்த அவள்

தஞ்சம் கொள்ளாமல்

வஞ்சம் செய்தது காலமும்

சஞ்சலம் கொள்ள செய்தது அவளை 

காலன் கூட அவளை அழைத்திருந்தால்

உடனே நானும் சென்றிருப்பேன் அவளோடு

ஆனால் அவள் சென்றதோ அவள் விரும்பிய அவனோடு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...