துணைவி துணையாய் இல்லாமல்
மறைந்தாலும்
துயிலுகையில் மனம் மறுத்து போனதே
அவளின் ஒரு துளி
அன்பு கூட ஒளடதமாய் மாறுமே
அண்மையில் ஊடலும்
தொலைவில் நினைவும் உறவில் உண்டே
தனிமை என்பதில்லை என்றும் என் மனதில்
அவள் நினைவால்
என நா செப்பினாலும்
நானும் என்னை நானே
மறந்தேனே
மறுப்பதும் மன்றாடுவதும்
வெறுத்து பேசியதால் தானே
மறைத்து வைத்த காதல் இன்று இனிக்காமல்
இளைத்ததே
வருவாள் வருவாள்
நான் நினைக்கும் வரை
மறவேன் மறவேன் என்பேன்
மறமே காதலில்
வீழ்ந்ததால்
விருந்தாக்கிய நாட்களை விட
வீழ்ந்த நாட்கள் மிகையே
நெஞ்சம் புகுந்த அவள்
தஞ்சம் கொள்ளாமல்
வஞ்சம் செய்தது காலமும்
சஞ்சலம் கொள்ள செய்தது அவளை
காலன் கூட அவளை அழைத்திருந்தால்
உடனே நானும் சென்றிருப்பேன் அவளோடு
ஆனால் அவள் சென்றதோ அவள் விரும்பிய அவனோடு

No comments:
Post a Comment