பொம்மையாய் இருந்தாலும் தங்கள்
தேவைக்காக தலையை அசைக்க வைக்கும் உலகம்
தலையசைக்கவும் கூடுமோ
தலையாட்டி பொம்மை போலே
செய்வது அறியாமலும்
காரணம் தெரியாமலும்
யாதென்பது புரியாமலும்
யாருக்கேன தோன்றாமலும்
பயன் யாதென விளங்காமலும்
தலைய அசைப்பதால்
நல்லவர்கள் நாம் இப்புவி மக்களுக்கு
களிமண் பொம்மை கூட
கல்யாண வீட்டை
அலங்கரிக்க
கல்யாணத்தை அலங்கரிக்கும் மணமகனும் களிமண் பொம்மை
போலே இருப்பது ஏன்?
வானம் தொட ஒற்றை காதல்
பார்வையும் வார்த்தையும்
இருக்கும் போது
அவனை பொம்மையைப் போலே மாற்றும்
தந்திரம் என்ன?
அதன் பயன் என்ன?

No comments:
Post a Comment