படுக்கையில் துறந்தது தூக்கம்
வெளியில் மழை துளியின் தாக்கம்
மழைத்துளி முகத்தில் விழுந்ததால் ஏனோ வெட்கம்
இன்னும் தொடர்கிறது தர்க்கம்
இது அல்லாது ஏது சொர்க்கம்
தாய் மண் மட்டுமே தந்தது அதற்கான விளக்கம்
காலத்தின் ஓட்டத்தால் தங்குவதில் சுணக்கம்
பிறந்த. மண் கற்றுத் தந்த ஆக்கம்
என்றும் அன்புடன் காட்ட வைக்கும் வணக்கம்
இரு கைகள் சேராத போதும்
ஏதோ ஒரு ஓசை
அது என் சுவாசக்காற்று கொடுத்த இசை
இது மட்டுமே தாரும் நீங்கா நினைவுகளின் அசை
தாங்கி பிடிக்கும் உறவுகளோடு தங்கிடவே ஆசை
புரிந்திடுமா எவருக்கும் என் மனதின் பாசை

No comments:
Post a Comment