Sunday, December 22, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


காதில் ஏறிய ஜிமிக்கி

காலில் ஏறிய வனப்பு

காதல் மெல்ல சொல்ல

காதால் கேட்டிலை அவன்

ஆதலினாலும் வந்தது ஈர்ப்பு

அவன் மேல்

கொண்டதும் என்ன

இழப்பதும் என்ன

உள்ளவரை வந்துவிட்டு

போகும்

அகவையி்ன் எண்ணத்தின் படி

மனதும் விடை கொடா 

காமம் இல்லா காதலை

எட்டி நின்றால் கூட

அவள் வாசம் வீசும்

அவன் மீதும்

மறைக்க நினைத்தாலும்

தோல்வியே என்றும்

உண்மை காதலே

உயிர்க் காதல்

என்றுமே அழிவதில்லை

சில நேரம் அழுகை

மட்டுமே பரிசாகும்

புரிந்தவர் பிரிந்தால் 

பரிவு கொள்ள 

ஆள் தேடும்

ஆள் தேடி அலுத்து போய்

ஆவி இழக்கும்

காதலில் இழுக்கில்லை

காதலில் வீழ்பவர் எவரோ

அவரே எழார்

பாவை வீழ்ந்தாலும்

எழும் காலப்போக்கில்

பாவையால் வீழ்தவனின் நிலை என்னவோ?


அந்த புறம் இந்த புறம் என்று

எந்த புறம் நோக்கினாலும் அழகே!

பெண்ணும் அவள் பெண்மையும்

மௌனம் கூட மொழியாகும்

ஆட்டம் கூட அதிர்வலை கொடுக்கும்

காண்பவர் மதி கூட

ஒன்றி நிற்கும்

தாளம் இல்லா இசையின் நடுவே

புள்ளிகள் இல்லா

கோலமாய் ஆடை விரிய

மெய் உறுதி கொள்ள

தலைசாய்த்து மயக்கும் மங்கை இவள்

மயங்கியது வானும் மண்ணும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...