காதில் ஏறிய ஜிமிக்கி
காலில் ஏறிய வனப்பு
காதல் மெல்ல சொல்ல
காதால் கேட்டிலை அவன்
ஆதலினாலும் வந்தது ஈர்ப்பு
அவன் மேல்
கொண்டதும் என்ன
இழப்பதும் என்ன
உள்ளவரை வந்துவிட்டு
போகும்
அகவையி்ன் எண்ணத்தின் படி
மனதும் விடை கொடா
காமம் இல்லா காதலை
எட்டி நின்றால் கூட
அவள் வாசம் வீசும்
அவன் மீதும்
மறைக்க நினைத்தாலும்
தோல்வியே என்றும்
உண்மை காதலே
உயிர்க் காதல்
என்றுமே அழிவதில்லை
சில நேரம் அழுகை
மட்டுமே பரிசாகும்
புரிந்தவர் பிரிந்தால்
பரிவு கொள்ள
ஆள் தேடும்
ஆள் தேடி அலுத்து போய்
ஆவி இழக்கும்
காதலில் இழுக்கில்லை
காதலில் வீழ்பவர் எவரோ
அவரே எழார்
பாவை வீழ்ந்தாலும்
எழும் காலப்போக்கில்
பாவையால் வீழ்தவனின் நிலை என்னவோ?
அந்த புறம் இந்த புறம் என்று
எந்த புறம் நோக்கினாலும் அழகே!
பெண்ணும் அவள் பெண்மையும்
மௌனம் கூட மொழியாகும்
ஆட்டம் கூட அதிர்வலை கொடுக்கும்
காண்பவர் மதி கூட
ஒன்றி நிற்கும்
தாளம் இல்லா இசையின் நடுவே
புள்ளிகள் இல்லா
கோலமாய் ஆடை விரிய
மெய் உறுதி கொள்ள
தலைசாய்த்து மயக்கும் மங்கை இவள்
மயங்கியது வானும் மண்ணும்

No comments:
Post a Comment