பொதி சுமப்பவனும் மதி கொண்டவனும்
இங்கே நடைப் பயணமாய்
பொதி சுமப்பவனுக்கும் உள்ளது அறிவு, அதை கீழே விழாமல் பார்த்துக் கொள்வதில்
யார் சொன்னது?
நான் கழுதை என்று
கொஞ்சி பேசும் போதும்
சினத்தில் கடியும் போதும்
பொதி சுமக்கும் போதும்
பேச்சுகள் பகிரும் போதும்
நானே வருவேன்
தானாய்
இளைத்தவன் அல்ல நான்
என் மேல் சிறிது சிறிதாய்
சுமைகள் ஏற்றும் போதும்
மொத்தமாய் தாங்குகிறேன்
சுமந்து செல்கிறேன்
என் பெயர் சொல்லி
யாரேனும் அழைத்தால்
சினம் கொள்ள வேண்டாம்
அச்சப்பட வேண்டாம்
வெட்கம் கொள்ள வேண்டாம்
தங்களால் இயலாதவற்றை
அடுத்தவர் தலையில்
கட்டும் மனிதரை விட
நான் எப்போதும்
ஒரு படி மேலே
புத்தகத்தை சுமந்தாலும்
அதன் அர்த்தம் விளங்கிக்
கொள்ள விழையவில்லை
மெத்த அறிவ கூட
மொத்தமாய் நம் இயல்பை. மாற்றும்
வருவது எதற்கு
போவது எதற்கு
இடையில் கொஞ்சம்
பாரம் சுமக்க
நான் பொதி சுமக்கும்
வேளையில் மனிதன்
படித்த அறிவோடு
வாழ்வை சுமக்கிறான்
சுமப்பது தொழிலே என்றான
பின் அதுவே தெய்வம்
சுமப்பது கூட பெரிதல்ல
தாங்கி செல்வதே சிறப்பு
இப்படிக்கு
பொதி சுமக்கும் கழுதை
பொதியும் குடும்பமும் ஒன்றே
இரண்டையும்
சுமக்க வழி தெரிந்திருக்க வேண்டும்
எடைக்கு போகும் புத்தகங்கள் இன்று இங்கே இதன் உணவாக

No comments:
Post a Comment