Thursday, September 11, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தாயின் மடி சிறப்பு என்றும்


சொகுசாய் துயில் கொள்ள 

அவள் பிடியில் பாதுகாப்பாய் உணர

அவள் அணைப்பில் இளைப்பாற

அவள் அரவணைப்பு அரணாய் அமைய

பேச்சு கூட நிதானிக்க

செயலும் ஆற்றல் பெற

எதிரியும் மண்டியிட்டு ரசிக்க

உடன்பிறப்பிடம் சண்டையிட்டு அவள்

மடியில் அடைக்கலமாக

வாழ்க்கை பயணம் இனிதாய் அமைய

அவள் பிடியில் நான்

இருப்பதே என் மகிழ்ச்சி


 இருட்டில் பூத்த மலர்கள் இங்கே

ஒன்றையொன்று பற்றிக் கொள்ள

தாய்மை இருட்டறையில்

கருவை சுமக்க

இருட்டும் சொர்க்கம் என்றே சிசு வளர

மீளா பந்தம் இவர்களுக்குள்

இணையும் கோடுகள்

இணையும் ஓர் புள்ளியில்

அது ஆரம்பமே அன்றி முடிவல்ல

- Veena 

கருவறையிலிருந்த

 பற்றுதல் இவ்வுலகில் வாழ

 துண்டிக்கப்படவே இயற்கை நீதி

ஆனால் ஏனோ சுடுகாடு வரை

 பிறருடைய பற்றுதலை தேடுது!


தாயின் ஸ்பரிசம் குழந்தையின்

 ஸ்பரிசம் இரண்டுமே

 ஒப்பற்றது,ஈடற்றது...ஈன்றவள்

 குழந்தையாக தன்னை பாவிக்க

 தொடரும் உறவு சங்கிலி.

- Vidhya 




No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...