தாயின் மடி சிறப்பு என்றும்
சொகுசாய் துயில் கொள்ள
அவள் பிடியில் பாதுகாப்பாய் உணர
அவள் அணைப்பில் இளைப்பாற
அவள் அரவணைப்பு அரணாய் அமைய
பேச்சு கூட நிதானிக்க
செயலும் ஆற்றல் பெற
எதிரியும் மண்டியிட்டு ரசிக்க
உடன்பிறப்பிடம் சண்டையிட்டு அவள்
மடியில் அடைக்கலமாக
வாழ்க்கை பயணம் இனிதாய் அமைய
அவள் பிடியில் நான்
இருப்பதே என் மகிழ்ச்சி
இருட்டில் பூத்த மலர்கள் இங்கே
ஒன்றையொன்று பற்றிக் கொள்ள
தாய்மை இருட்டறையில்
கருவை சுமக்க
இருட்டும் சொர்க்கம் என்றே சிசு வளர
மீளா பந்தம் இவர்களுக்குள்
இணையும் கோடுகள்
இணையும் ஓர் புள்ளியில்
அது ஆரம்பமே அன்றி முடிவல்ல
- Veena
கருவறையிலிருந்த
பற்றுதல் இவ்வுலகில் வாழ
துண்டிக்கப்படவே இயற்கை நீதி
ஆனால் ஏனோ சுடுகாடு வரை
பிறருடைய பற்றுதலை தேடுது!
தாயின் ஸ்பரிசம் குழந்தையின்
ஸ்பரிசம் இரண்டுமே
ஒப்பற்றது,ஈடற்றது...ஈன்றவள்
குழந்தையாக தன்னை பாவிக்க
தொடரும் உறவு சங்கிலி.
- Vidhya

No comments:
Post a Comment