அவன் விழியில் ஞாலம் காண
ஓர் ஒத்திகை இங்கே
மூன்று முடிச்சின் பந்தம்
தொடர்கிறது அவன் பார்வையால்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
களிப்பின் அடையாளம் இப்போது
எதுவும் சிறக்க
வானில் அவள் பறக்க
இருட்டில் உள்ளவருக்கு
வெளிச்சம் தரும் ஓர் அலாதி ஆனந்தம்
கண் மூடி பால் குடிக்கும் பூனையும்
உலகம் மறக்க
தன் விழி மூடி
அவன் பால் உள்ள
காதல்
அவளை மேலும் இட்டு செல்ல
யார் தியாகி இங்கே?
விழிகளை மறைத்தவளா?
அவள் விழிக்கு ஈடாய்
தன் விழியால் அவளை அணைத்தவனா?
அவனுக்கு வசந்தம் கொடுக்க வந்தவளா?
அவனே உலகம் என்று மகிழ்ச்சி கொள்ள செய்தவனா?
விழிகள் நான்கும்
அடைக்கலம் ஆன பின்
உடல்களும் மொழி பேசுமே!
சத்தமின்றி ஓர் போர்
அவர்களுக்குள்
யார் யாரை தோற்கடிப்பது
என்று
மலர மலர வாசம் வீசும்
அடுத்தவர் நுகர்வதற்காக அல்ல
தானும் தான் சார்ந்தோர் வாழ்வு சிறக்கவும்
- Veena
அது ஒரு கனா காலம்
திரும்பி வரா இளமை காலம்
வண்ண வண்ண கனவை
சுமக்கும் பொற்காலம்
கண்ணாம்பூச்சி ஆடும் காதல்
விளையாட்டு , யாரும் அறியா
மாயலோகம், இருவர் கொண்ட
ஓர் உலகு!
- Vidhya

No comments:
Post a Comment