Tuesday, September 9, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அவன் விழியில் ஞாலம் காண

ஓர் ஒத்திகை இங்கே

மூன்று முடிச்சின் பந்தம்

தொடர்கிறது அவன் பார்வையால்

கண்ணாமூச்சி ஆட்டத்தில்

களிப்பின் அடையாளம் இப்போது 

எதுவும் சிறக்க

வானில் அவள் பறக்க

இருட்டில் உள்ளவருக்கு

வெளிச்சம் தரும் ஓர் அலாதி ஆனந்தம் 

கண் மூடி பால் குடிக்கும் பூனையும்

உலகம் மறக்க

தன் விழி மூடி

அவன் பால் உள்ள

காதல் 

அவளை மேலும் இட்டு செல்ல

யார் தியாகி இங்கே?

விழிகளை மறைத்தவளா?

அவள் விழிக்கு ஈடாய் 

தன் விழியால் அவளை அணைத்தவனா?

அவனுக்கு வசந்தம் கொடுக்க வந்தவளா?

அவனே உலகம் என்று மகிழ்ச்சி கொள்ள செய்தவனா?


விழிகள் நான்கும்

அடைக்கலம் ஆன பின்

உடல்களும் மொழி பேசுமே!

சத்தமின்றி ஓர் போர்

அவர்களுக்குள்

 யார் யாரை தோற்கடிப்பது

என்று

மலர மலர வாசம் வீசும்

அடுத்தவர் நுகர்வதற்காக அல்ல

தானும் தான் சார்ந்தோர் வாழ்வு சிறக்கவும்

- Veena 

அது ஒரு கனா காலம்

திரும்பி வரா இளமை காலம்

வண்ண வண்ண கனவை

 சுமக்கும் பொற்காலம்

கண்ணாம்பூச்சி ஆடும் காதல்

 விளையாட்டு , யாரும் அறியா

 மாயலோகம், இருவர் கொண்ட

 ஓர் உலகு!

- Vidhya 



No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...