இறக்கை விரிந்தால் பறக்க இயலும்
மனதை விரித்தால்
பறப்பதையும் அடைய முடியும்
சிறகை விரித்து வானில்
பறக்க ஆசை பறவை போலே
இருப்பினும்
மண்ணில் கொள்ளும் ஆசை
விண்ணில் இயலாது
யாருக்கும் ஏதும்
சொந்தமில்லை அங்கே
அகத்தில் ஒன்று
புறத்தில் ஒன்று
கூற இயலாத இடத்தில்
மனிதனுக்கும் வேலை உண்டோ?
தவிக்கும் மனதிலிருந்து
மீள வழி அறியாத போது
வளியில் கலந்து
வழி அறியாது
பறக்க இறகுகள் மட்டும் காணாது
மெய் எடை குறைப்பு மட்டும் போதாது
பொருள் பற்று
இல்லாத எளிய
தேகமே மெய்யாகும்
- Veena
கையைவிட்டு பிரிந்தால் மட்டுமே
அதற்கு பறக்க முடியும் என்று
தெரியும்..எதையும் முயற்சிக்க
மட்டுமே விரியும் உலகு,பல நேரம்
ஒரே இடத்தில் ஒட்டிக்கொண்டு
ஒட்டுண்ணியாக வாழ்வதை விட
இடபெயர்ச்சி செய்து
பார்,உன்னையும் அறிய...உலகு
பல அதிசயத்தை தர
காத்திருக்கு!
- Vidhya

No comments:
Post a Comment