Monday, September 8, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இறக்கை விரிந்தால் பறக்க இயலும்

மனதை விரித்தால்

பறப்பதையும் அடைய முடியும்


 சிறகை விரித்து வானில்

பறக்க ஆசை பறவை போலே 

இருப்பினும்

மண்ணில் கொள்ளும் ஆசை 

விண்ணில் இயலாது

யாருக்கும் ஏதும்

 சொந்தமில்லை அங்கே

அகத்தில் ஒன்று

 புறத்தில் ஒன்று

கூற இயலாத இடத்தில்

மனிதனுக்கும் வேலை உண்டோ?

தவிக்கும் மனதிலிருந்து

மீள வழி அறியாத போது

வளியில் கலந்து

வழி அறியாது

பறக்க இறகுகள் மட்டும் காணாது

மெய் எடை குறைப்பு மட்டும் போதாது

பொருள் பற்று 

இல்லாத எளிய

தேகமே மெய்யாகும்

- Veena 

கையைவிட்டு பிரிந்தால் மட்டுமே

அதற்கு பறக்க முடியும் என்று

 தெரியும்..எதையும் முயற்சிக்க

 மட்டுமே விரியும் உலகு,பல நேரம்

 ஒரே இடத்தில் ஒட்டிக்கொண்டு

 ஒட்டுண்ணியாக  வாழ்வதை விட

 இடபெயர்ச்சி செய்து

 பார்,உன்னையும் அறிய...உலகு

 பல அதிசயத்தை தர

 காத்திருக்கு!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...