Saturday, September 6, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


முதுமையில் கூட

தள்ளி வைப்பதில்லை

இவள் 

கட்டியவனையும்

தான்

தூக்கியவனையும்


 அணைப்பில் சிக்குவதும் 

எதையும் அனுசரித்து

அணைப்பதும் 

பெண்ணிற்கான குணமே!

தண்ணீரை சுமந்து

ஒத்திகை பார்க்கிறாள்

தன் கருவை

 வயிற்றில் தாங்க

தண்ணீர் குடம் ஏந்தும் அவள்

பிறப்பதும் தண்ணீரிலே!

சிரமம் கொள்ளாது

தாங்கும் அவளே

குடும்பத்தின் அழகு

தன் மொத்த அழகையும்

 அடகு வைத்த பின்னே 

தண்ணீரில் நீச்சல்

போட்டு

வாழ்விலும் எதிர்நீச்சல் போடுகிறாள்

இடை அழகு பெற

சுமந்த தண்ணீர்

இங்கே அவளை

இடை ஒடிய செய்தாலும்

அதுவே அவளுக்கு

சுகமான சுமை தான்

- Veena 

எந்த நாளும் ஓய்வு இல்லை

இவள் இப்படி இல்லா விட்டால்

 தான் நோய் என்று சொல்லும்

 உலகு!

அவளுக்கு மட்டுமே தெரியும் எது

 சுகம் ,சுமை என்று அவளை

 சுயமாக சிந்திக்க விட்டு விடுங்க!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...