Sunday, September 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வழி தெரியாமல் நிற்கும் போது

தன் விழியால் நம்மை தாங்கியவரை 

அவர் விழி தெரியாத போது

தாங்க மறுப்பதும் ஏன்


படித்த உண்மைகளை கூட

வீட்டில் நிஜமாக்க 

தெரியாதவர் தந்தை

குடும்பத்தின் சுவர் அவரே

என்ற இறுமாப்பு இருந்ததில்லை 

பெண் பிள்ளைகளிடம்

குழந்தைக்கு தாலாட்டு பாடி கேட்டதில்லை

ஆனாலும் பாசத்தில் ஈடில்லை 

சிறு வயதில் பிள்ளைகளை தூக்கி நடந்ததில்லை

தன் கால்களில் மேலேறி

பிள்ளைகள் விளையாடி களிப்பதால்

வலி தாங்கும் இதயம்

எத்தனை முறை அடித்தாலும்

கண்ணீர் விட தெரியாது

கம்பீர குரலுக்கு சொந்தம் என்பதால்

- Veena 

வீட்டின் தூண்,சிறு விரிசல்

 கொண்டாலும் பராமரிப்பு

 இல்லாமலே தன்னை தானே

 புதுப்பித்து மீண்டும் பிறக்கும் ஓர்

 உயிர்,முதுமையிலும் குடும்பம்

 தன் பொறுப்பு என்று நிற்காமல்

 ஓடும் கடிகாரம்,தேவையறிந்து

 துணை நிற்கும் ஓர்

 உயிர்,பாசாங்கு செய்ய தெரியாத

 குழந்தை ,அவருக்கு எதுவும்

 நிகர் இல்லை இந்த உலகில்...

Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...