வழி தெரியாமல் நிற்கும் போது
தன் விழியால் நம்மை தாங்கியவரை
அவர் விழி தெரியாத போது
தாங்க மறுப்பதும் ஏன்
படித்த உண்மைகளை கூட
வீட்டில் நிஜமாக்க
தெரியாதவர் தந்தை
குடும்பத்தின் சுவர் அவரே
என்ற இறுமாப்பு இருந்ததில்லை
பெண் பிள்ளைகளிடம்
குழந்தைக்கு தாலாட்டு பாடி கேட்டதில்லை
ஆனாலும் பாசத்தில் ஈடில்லை
சிறு வயதில் பிள்ளைகளை தூக்கி நடந்ததில்லை
தன் கால்களில் மேலேறி
பிள்ளைகள் விளையாடி களிப்பதால்
வலி தாங்கும் இதயம்
எத்தனை முறை அடித்தாலும்
கண்ணீர் விட தெரியாது
கம்பீர குரலுக்கு சொந்தம் என்பதால்
- Veena
வீட்டின் தூண்,சிறு விரிசல்
கொண்டாலும் பராமரிப்பு
இல்லாமலே தன்னை தானே
புதுப்பித்து மீண்டும் பிறக்கும் ஓர்
உயிர்,முதுமையிலும் குடும்பம்
தன் பொறுப்பு என்று நிற்காமல்
ஓடும் கடிகாரம்,தேவையறிந்து
துணை நிற்கும் ஓர்
உயிர்,பாசாங்கு செய்ய தெரியாத
குழந்தை ,அவருக்கு எதுவும்
நிகர் இல்லை இந்த உலகில்...
Vidhya

No comments:
Post a Comment