உழைக்கும் கரங்கள் இங்கே
முக மலர்ச்சியோடு
உழைப்பை கரத்தில்
தாங்கும் இதயங்கள்
ஒன்று கூடின
எதிர்கால வாழ்வுக்காக
எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில்
ஓர் பயணம்
எறும்பு போல்
ஓர் அணியாய்
இசையின்
ஓர் சுவரமாய்
ஒற்றுமையில்
ஓர் மனதாய்
கைப்பற்ற நினைக்கும்
ஓர் இலக்கிற்காக
இல்லத்தில் இருக்கும்
ஓர் உயிரை காக்க
ஓய்வில்லாமல்
ஓர் பிழைப்பு
ஓசையில்லாமல்
ஓர் குரல்
ஆசையில்லாமல்
ஓர் அறிவின் செயல்
இது தானே குடும்பத்தின்
ஓர் சுவை
- Veena
நேற்று என்று ஒன்று இல்லை
நாளைய பற்றிய கவலை இல்லை
இன்று மட்டுமே நிஜம் என்று
துள்ளிச்செல்லும் கால்களுக்கு
வலிக்காது, கல்லும் குத்தாது,
முள்ளும் குத்தினாலும்
தூரப்போட்டு, அம்மா தரும்
பிடிச்சோற்றிற்கு உல்லாசமாக
செல்லும் நடையோட்டம்..
துள்ளிச்செல்லும்
இளங்கன்றுகளை எண்ணி
கனவை தாங்கி,சுமையை
தேகம் தூக்க,துவளாமல்
செல்லும் நிழல் இல்லை தாய்..
- Vidhya

No comments:
Post a Comment