Saturday, September 20, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


உழைக்கும் கரங்கள் இங்கே

முக மலர்ச்சியோடு

உழைப்பை கரத்தில் 

தாங்கும் இதயங்கள்

ஒன்று கூடின

எதிர்கால வாழ்வுக்காக


 எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் 

ஓர் பயணம் 

எறும்பு போல்

ஓர் அணியாய் 

இசையின் 

ஓர் சுவரமாய்

ஒற்றுமையில் 

ஓர் மனதாய்

கைப்பற்ற நினைக்கும் 

ஓர் இலக்கிற்காக

இல்லத்தில் இருக்கும் 

ஓர் உயிரை காக்க 

ஓய்வில்லாமல் 

ஓர் பிழைப்பு

ஓசையில்லாமல் 

ஓர் குரல்

ஆசையில்லாமல் 

ஓர் அறிவின் செயல்

இது தானே குடும்பத்தின் 

ஓர் சுவை

- Veena 

நேற்று என்று ஒன்று இல்லை

நாளைய பற்றிய கவலை இல்லை

இன்று மட்டுமே நிஜம் என்று

துள்ளிச்செல்லும் கால்களுக்கு

 வலிக்காது, கல்லும் குத்தாது,

 முள்ளும் குத்தினாலும்

 தூரப்போட்டு, அம்மா தரும்

 பிடிச்சோற்றிற்கு உல்லாசமாக

 செல்லும் நடையோட்டம்..

துள்ளிச்செல்லும்

 இளங்கன்றுகளை எண்ணி

 கனவை தாங்கி,சுமையை

 தேகம்  தூக்க,துவளாமல்

 செல்லும் நிழல் இல்லை தாய்..

- Vidhya 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...