தாய்க்கு தாயாய்
தந்தைக்கு தந்தையாய்
சகோதரனாய்
தோழனாய்
நம்மை மீட்பவன்
அவனே!
நிஜ உருவம் தேவையில்லை
அவனுக்கு நம்மை
ஆட்கொள்ள
எவ்வுயிரினமும் அவனாவான்
நம் தேவை பூர்த்தியாக
அவனை மனதிற்
ஏற்போம்
இனங்கள் வகுத்தது
கொள்கையாலே
கடவுள் ஏற்பது மனதாலே
வடிவங்கள் பல எடுத்தாலும்
உலகில் நம்மை
உய்விக்க வைப்பவன்
அவன் ஒருவனே!
அவனை மனதால் ஏற்பதும்
துறப்பதும் மனிதன்
கையினிலே
- Veena
அவன் இருக்கிறான் என்ற
நம்பிக்கையை விட உன்னையே
அவனாக நினைத்துப் பார்
அனைத்தையும் உணர்வாய்,
நேசிப்பாய்,அறியாமையை
விலக்க வழி பிறக்கும்!
- Vidhya

No comments:
Post a Comment