Friday, September 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தாய்க்கு தாயாய்

தந்தைக்கு தந்தையாய்

சகோதரனாய் 

தோழனாய்

நம்மை மீட்பவன் 

அவனே!

நிஜ உருவம் தேவையில்லை

அவனுக்கு நம்மை

ஆட்கொள்ள

எவ்வுயிரினமும் அவனாவான் 

நம் தேவை பூர்த்தியாக

அவனை மனதிற் 

ஏற்போம்

இனங்கள் வகுத்தது

கொள்கையாலே

கடவுள் ஏற்பது மனதாலே 

வடிவங்கள் பல எடுத்தாலும் 

உலகில் நம்மை

உய்விக்க வைப்பவன்

அவன் ஒருவனே!

அவனை மனதால் ஏற்பதும்

துறப்பதும் மனிதன்

கையினிலே

- Veena 

அவன் இருக்கிறான் என்ற

 நம்பிக்கையை விட உன்னையே

 அவனாக நினைத்துப் பார்

 அனைத்தையும் உணர்வாய்,

 நேசிப்பாய்,அறியாமையை

 விலக்க வழி பிறக்கும்!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...