Friday, September 19, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காதலிக்கு வரைந்த மடல்கள் யாவும் 

சருகாய் போயின

என் காதலை ஏற்காத

என் காதலியின் மனமும் சருகே 

என்று பின்பே உணர்ந்தேன் 

அவள் மனமும் சருகாய் மாற காரணம்

அவளுக்கு பிறரிடமிருந்து வந்த

காதல் மடல்களே!

ஏற்பதும் நிராகரிப்பதும் 

காதலில் சகஜமே!


 காகிதத்தின் மீது எழுதுகோல்

 கொண்ட காதலால் 

பிறந்த எழுத்துகள்

மட்டும் ஏன் நிராகரிக்கப்பட்டது

பூமியில் பிறக்கும்

அனைத்திற்கும் ஓர் 

அடைக்கலமுண்டு

காதலித்து தோற்றவன் மட்டுமே

இங்கே பல பேருண்டு


 இறந்தகாலத்தின் பதிவு இங்கே

நிகழ்காலத்தில் அரங்கேறும் உண்மை 

எதிர்காலத்தின் பார்வையாளருக்காக


 எண்ணத்தின் வண்ணத்தில் பிறப்பவை எழுத்துக்கள்

புள்ளிகளும் கோலமாய் மாறுபவை எழுத்துக்கள்

காகிதமும் எழுதுகலனும் காதல்

கொள்ள பிறந்தவை எழுத்துக்கள் 

முன்னேறி சென்று வடிக்குமே அன்றி 

பின் செல்லாது

அடித்தலும் கிறுக்கல்களும் 

வடிவம் பெறுபவை இங்கே

புரிந்தவருக்கு மட்டுமே

இவை பொக்கிஷமாகும்

- Veena 


காதலன் காதலி உறவோ

ஒன்றில்லாமல் மற்றொன்று

 வாடுதே, எண்ணத்திற்கு வடிவம்

 தந்து ,தேடிய போதெல்லாம்

 நினைவிற்கு உயிர் கொடுத்து,

எத்தனை முறை நெஞ்சில் சுமந்து

 சென்ற கைகள் இன்று

 உங்களின் முகவரியில்லாமல்

 விரல்கள் நோக எதையோ டைப்

 செய்து,மௌனத்திற்கு

 உயிர்க்கொடுத்த மொழி இன்று

 எழுத்துகளை மறக்க செய்தது

 என்ன?

மீண்டும் வாசம் வீச ஏங்கும்

 வார்த்தை மொட்டுக்கள்,

மைக்கொண்டு மலர

 காத்திருக்கும் எண்ணங்கள்,

வண்டு வந்து வடிக்கும் நேரம்

 என்றோ..

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...