இயந்திரத்தின் காதல்
அதன் உரிமையாளரின் கையில்
மனிதனின் காதல் மட்டும் எவர் கையில்?
யார் கைவிட்டதால் நொறுங்கியது
இதயம்?
ஏந்தியவன் கை தவறியதால்
நொறுங்கியதா?
இதயத்தில் விரிசல்
வந்ததால்
அவனும் நொறுங்கினானா?
யார் காரணம் என்ற
தர்க்கம் தேவைப்படாது
நொறுங்கியது கண்ணாடி அல்ல
அள்ளி குப்பையில் வீச
இதயம் விரிசல் கொண்டாலும்
தகர்த்தவர் மீட்கும் வரை
இணையாது
இணைந்தாலும் அங்கே
உண்மை அன்பு
இருக்குமோ?
தகர்ந்தது தகர்ந்ததே!
தகர்ந்ததும் நகர்ந்ததே!
நகர்ந்தும் வலி தந்ததே!
வலி தந்த பின்னே
வழியும் இல்லை
இரு மனங்கள் ஒருசேர
வலியது விதி என்றான பின் யாவும்
கடந்து செல்லவே!
- Veena
இயந்திரம் என்று தெரிந்தும்
யாருடா எனக்கு இதயத்தை
பொறுத்தியது..அதனால் எனக்கு
ஏற்பட்ட கதிதை பார்,நொறுங்கி
போன என் தலை எதாவது ஒன்று
போதும்! இது வேண்டாம்,
என்னை சிந்திக்க விடாமல் சதா
தொல்லை பண்ணுது !
- Vidhya

No comments:
Post a Comment