சேலையின் வரிகள்
சொல்வதென்ன அவள்
மன வரிகளையா?
இல்லை
அவள் தொலைத்த முகவரியையா?
இல்லை
அவள் மனவலிகளையா?
சேலை கட்டிய பெண்ணிற்கு
வாசமுண்டு
என்பது பொய்யோ?
வாசமலர் கூட சூடாமல்
அவள் வாசம் இழந்தாலே!
ஏன் என்ற வினாவின்
முன் விடை கொடுக்க
முடியாமற் போவதும் உண்டு பல சமயங்களில்
ஜன்னலோர வெளிச்சம் கூட இங்கே
இருளானதே!
மனதின் ஆசை கூட ஓசையின்றி இசைத்ததே!
எதுவும் வடிவம் பெற உண்மையும் எதிர் நிற்குமே!
கலங்காதே மனமே!
நீ உன்னை புரிந்து கொள்ளும் வரை தான் அறியாமை
- Veena
அன்னையின் மடி போன்ற
ஆறுதலை தரும் ஓர்
இடம்,காற்றும் கம்பியின்
அனுமதி பெற்ற பின்னே
தலைக்கோத, அதன் தாலாட்டில்
உறங்க எந்த தலையணையின்
துணையும் வேண்டாம்..
- Vidhya

No comments:
Post a Comment