Monday, September 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


சேலையின் வரிகள் 

சொல்வதென்ன அவள்

மன வரிகளையா?

இல்லை 

அவள் தொலைத்த முகவரியையா?

இல்லை 

அவள் மனவலிகளையா?

சேலை கட்டிய பெண்ணிற்கு

வாசமுண்டு

என்பது பொய்யோ?

வாசமலர் கூட சூடாமல்

அவள் வாசம் இழந்தாலே!

ஏன் என்ற வினாவின்

முன் விடை கொடுக்க

முடியாமற் போவதும் உண்டு பல சமயங்களில்

 ஜன்னலோர வெளிச்சம் கூட இங்கே

இருளானதே!

மனதின் ஆசை கூட ஓசையின்றி இசைத்ததே! 

எதுவும் வடிவம் பெற உண்மையும் எதிர் நிற்குமே!

கலங்காதே மனமே!

நீ உன்னை புரிந்து கொள்ளும் வரை தான் அறியாமை

- Veena 

அன்னையின் மடி போன்ற

 ஆறுதலை தரும் ஓர்

 இடம்,காற்றும் கம்பியின்

 அனுமதி பெற்ற பின்னே

  தலைக்கோத, அதன் தாலாட்டில்

 உறங்க எந்த தலையணையின் 

துணையும் வேண்டாம்..

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...