எவருக்கும் வேண்டும் இரை
பசியை போக்க
உடைந்த மரத்தில் தொங்குபவன்
நீரில் வீழ்ந்தால்
முதலைகளால் மரணம்
மாறாக உடைந்த மரத்தை கொண்டு
கரையேறினால்
நிலத்தில் சிங்கத்தால் மரணம்
மரத்தில் தொங்கி கொண்டே
இருந்தால் பாம்பினால் மரணம்
எப்படி தப்பிப்பான் அவன்?
விதியை மதியால் மாற்றலாம் என்பர்
சிங்கத்திற்கும் முதலைகளுக்கும்
இரை யே தேவை
தவிர இவன் அல்ல
இரண்டிற்கும் இரண்டும் எதிரியே
அவைகளை ஒருவருக்கொருவர் இரையாக்கி
ஒடியும் கிளையோடு நீரில் விழ
பாம்பும் நீரில் விழும்
தன்னை காப்பாற்றவே நினைக்கும் பாம்பு
மனிதனை விட்டு விலகும்
நம்மில் உள்ள துன்பமும் இதைப்போலவே!
விதி கைகூட மதி சிறக்கும்
- Veena
பல ஆபத்தின் நடுவே வாழ்வின்
மீதான நம்பிக்கையிலேயே
நகருது பலரின் வாழ்க்கை..
ஒரு வித்தியாசம்
பலருக்கு வெளிப்படையாக
தெரியும் ,சிலருக்கு அது ஆபத்து
என்று தெரியாமலே மாய நதி
போல சுற்றி வரும்.
- Vidhya

No comments:
Post a Comment