Monday, September 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 எவருக்கும் வேண்டும் இரை 

பசியை போக்க

உடைந்த மரத்தில் தொங்குபவன்

நீரில் வீழ்ந்தால்

முதலைகளால் மரணம்

மாறாக உடைந்த மரத்தை கொண்டு

கரையேறினால் 

நிலத்தில் சிங்கத்தால் மரணம்

மரத்தில் தொங்கி கொண்டே 

இருந்தால் பாம்பினால் மரணம்

எப்படி தப்பிப்பான் அவன்?

 விதியை மதியால் மாற்றலாம் என்பர்

சிங்கத்திற்கும் முதலைகளுக்கும் 

இரை யே தேவை

தவிர இவன் அல்ல

இரண்டிற்கும் இரண்டும் எதிரியே

அவைகளை ஒருவருக்கொருவர் இரையாக்கி

ஒடியும் கிளையோடு நீரில் விழ

பாம்பும் நீரில் விழும்

தன்னை காப்பாற்றவே நினைக்கும் பாம்பு

மனிதனை விட்டு விலகும்

நம்மில் உள்ள துன்பமும் இதைப்போலவே!

விதி கைகூட மதி சிறக்கும்

- Veena 

பல ஆபத்தின் நடுவே வாழ்வின்

 மீதான நம்பிக்கையிலேயே

 நகருது பலரின் வாழ்க்கை..

ஒரு  வித்தியாசம்

 பலருக்கு வெளிப்படையாக

 தெரியும் ,சிலருக்கு அது ஆபத்து

 என்று தெரியாமலே மாய நதி

 போல சுற்றி வரும்.

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...