அன்புள்ள காதலியே!
என் பிரதிபலிப்பாய் நீ இருக்க
நான் வேண்ட
உன் வசம் என் சுவாசம் வீச
நான் வேண்ட
உன் மெய்யழகு என்
அறிவை மெய்யாலும் இழக்க
என் மெய்யும் வாய்மை
இழந்து முன் கொண்ட காதலை மறக்க
அது உன்னிடம் மறைக்க
நான் நானாகவில்லை இப்போது
கடிதம் வரைந்து என் காதலை உன்னிடம்
மெய்ப்பிக்க காகிதம்
கூட இல்லை
சிலாகித்து பேச உனக்கு
நேரமுமில்லை
ஒரு வரி கூட ஒரு கோடி
எண்ணங்கள் சொல்லும்
மனதில் வரிகள் வரைந்தாலும்
அதுவும் வலிகளாய்
மாற காண்கிறேன்
மாற்றம் இயல்புதான்
அது ஏமாற்றம் தாராத வரை
வலிகளும் இனிமைதான்
அது சுமை என்று எண்ணாத வரை
பல வார்த்தைகள் பகிர நான் வேண்ட
உன் முன்னே
பல நிஜங்கள்
கடமை என்று சொல்லி நிழலாட
வழி தெரியாது நானும் உன்
வருகைக்காக ஏங்க
என் வருகையை கூட
நீ மறுக்க
ஏதும் வருவது எது வரை
என்றறியாத போது
வாழ்வில் காதல் மட்டும்
நீடிப்பதும் ஏனோ?
முடி சூடா மன்னன் போலே
வாழ்வில் அடைந்த
இன்னல்களும் என்
கண் முன்னே
அடி தொடும் வரை
இறைவனும் எனை
சோதிக்க
அவன் அடி தொடவும்
என் மனம் விலகி நிற்க
உன் காலடி தேடி வர
நான் நினைக்க
அவன் படுத்தும் பாடு
எதுவும் அப்பாற்பட்டதே!
முன்பு கிழித்த மடல்கள்
இப்போது வஞ்சம் தீர்த்தன
கிழிந்த நெஞ்சத்தால்
தற்காத்து கொள்ள கற்ற கலையும்
உன்னிடம் தோற்க
என்னிடம் உன்னைக் கொடு என்றேன்

No comments:
Post a Comment