முகவரி இழந்த முதுமை
காலன் அழைக்கும் வரை
இது கொடுமை
ஊட்டி வளர்த்த பிள்ளைகளின்
கைமாறு தான்
இதுவும்
உயிர் துறக்கும் முன்னே
பிள்ளைகளுக்கு பாரமானது
பூமிக்கு அர்ப்பணமானது
பெற்றவளும் பேறு பெற்றாள்
பெற்றெடுத்த பிள்ளைகளின்
உதவியை நிராகரித்து
முதுமை என்றும் கொடுமையே
தனிமை ஆட்கொள்ள
முதுமை கொடுமை
வெறுமை கூட தோற்கும் முதுமையில்
தாலாட்டு பாடிய தாய்க்கு
இங்கே ஒப்பாரி பாடவும் ஆள்
இல்லாமல் அனாதையாய்
- Veena
காலம் ஒரு வட்டம், விட்ட இடத்தை
ஒவ்வொருவரும் அடைவதே
நியதி !
எதை சேர்க்கா விட்டாலும்
முதுமையில் ஆரோக்கியமான
மனதையும்,நட்பையும் காக்க
தவறவிட கூடாது..
பிறப்பை போல் இழப்பையும்,
இறப்பையும் வரவேற்க கூட்டமும்,
ஆட்டமும் தேவை!
- Vidhya

No comments:
Post a Comment