Wednesday, September 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 




முகவரி இழந்த முதுமை

காலன் அழைக்கும் வரை

இது கொடுமை


ஊட்டி வளர்த்த பிள்ளைகளின்

கைமாறு தான்

இதுவும்

உயிர் துறக்கும் முன்னே

பிள்ளைகளுக்கு பாரமானது

பூமிக்கு அர்ப்பணமானது


 பெற்றவளும் பேறு பெற்றாள் 

பெற்றெடுத்த பிள்ளைகளின்

 உதவியை நிராகரித்து

முதுமை என்றும் கொடுமையே


 தனிமை ஆட்கொள்ள

முதுமை கொடுமை

வெறுமை கூட தோற்கும் முதுமையில்


 தாலாட்டு பாடிய தாய்க்கு

இங்கே ஒப்பாரி பாடவும் ஆள்

இல்லாமல் அனாதையாய் 

- Veena 

காலம் ஒரு வட்டம், விட்ட இடத்தை

 ஒவ்வொருவரும் அடைவதே

 நியதி  !

எதை சேர்க்கா விட்டாலும்

முதுமையில் ஆரோக்கியமான

 மனதையும்,நட்பையும் காக்க

 தவறவிட கூடாது..

பிறப்பை போல் இழப்பையும்,

 இறப்பையும் வரவேற்க கூட்டமும்,

ஆட்டமும் தேவை!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...