Wednesday, January 14, 2026

2025 - தேடலும் விடையும் by Vidhya Nivash

 


அன்புள்ள வித்யா,

365 நாட்கள் தந்தேனே என்ன செய்தாய்.

சிலவற்றை கற்றேன்,பெற்றேன்,இழந்தேன்,

கொடுத்தேன்,சில நாட்களை கிழிக்க,

 அழிக்க நினைத்தேன், சிலவற்றை

 ரசித்தேன்,வியந்தேன்,சிலவற்றை

 வெறுத்தேன், இனம்புரியாத காதல்

 ,கோபம்,தாகம் கொண்டேன்,கடைசியில்

 தெளிந்தேன்,சிலவற்றுக்கு இல்லை என்று

 சொல்ல பழகு,பலவற்றுக்கு போதும் என்ற

 எண்ணம் பிறந்தது,முடிந்த வரை யாரையும்

 காயப்படுத்ததே.

இந்த வருடத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும்

 நன்றி.இந்த வருட பாடம்...

நீ கொண்ட பூதவுடல் தாய் தந்தையர் தந்தது, 

உன் பாரத்தை சுமை என்று  நினைத்ததில்லை இப்பூலகு  எப்போதும்,

 கையளவு மனதில் பல குப்பைகளை சுமந்து நிற்கிறாயே!

 எதை கொடுக்கிறயோ ,அது மீண்டும் திரும்ப கிடைக்கும் .

அதில் எந்த மாற்றமும் இல்லை. அதை

 தாண்டி கிடைக்கும் ஆசிர்வாதகளை

 அனுபவி, ஆராயதே .

நேற்று இருப்பது இன்றில்லை, இன்றுள்ளது

 நாளையில்லை இதற்கு இடையில் வரும்

 எண்ண அலைகளை அடக்கி இதுவும் கடந்து

 போகும் என்று தேங்கி கிடக்க, புழுவே

 வளரும் ,முயற்சி செய் ,முன்னேறி செல்,

 ஓடும் நதி போல எல்லையில்லாமல்

 பாய்ந்து ஓடு...

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...