Thursday, January 8, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பார்த்து பார்த்து அலுத்துப் போனதோ ?

கேட்டு கேட்டு புளித்துப் போனதோ?

அழுத்தி அழுத்தி விரல்கள் மரத்துப் போனதோ?

அமைதியை தேடி மனம் அலைந்ததோ?

மெய்யின் உருவம் மாறிப் போனதோ?

ஏன் இந்த நிலை ?

அலைபேசியை தூர வைத்தால்

அழுத்தம் குறையுமே!

அளவிற்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சே!

- Veena 

சோகத்தில் பாதி ஏக்கத்தில் மீதி

துரோகத்தில் பாதி தேகத்தில் மீதி

இளமையில் பாதி தனிமையில் மீதி 

வறுமையில் பாதி வெறுமையில்

 மீதி

நினைவில் பாதி கனவில் மீதி

துக்கம் பாதி தூக்கம் மீதி

மொத்தத்தில் பாதி முத்தத்தில் மீதி

 கழிந்தன ..

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...