பார்த்து பார்த்து அலுத்துப் போனதோ ?
கேட்டு கேட்டு புளித்துப் போனதோ?
அழுத்தி அழுத்தி விரல்கள் மரத்துப் போனதோ?
அமைதியை தேடி மனம் அலைந்ததோ?
மெய்யின் உருவம் மாறிப் போனதோ?
ஏன் இந்த நிலை ?
அலைபேசியை தூர வைத்தால்
அழுத்தம் குறையுமே!
அளவிற்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சே!
- Veena
சோகத்தில் பாதி ஏக்கத்தில் மீதி
துரோகத்தில் பாதி தேகத்தில் மீதி
இளமையில் பாதி தனிமையில் மீதி
வறுமையில் பாதி வெறுமையில்
மீதி
நினைவில் பாதி கனவில் மீதி
துக்கம் பாதி தூக்கம் மீதி
மொத்தத்தில் பாதி முத்தத்தில் மீதி
கழிந்தன ..
- Vidhya

No comments:
Post a Comment