தோள் பாவையாரை ஆட்டுவிக்கும்
தோள்கள் இங்கே
தான் தோள் நிமிர்ந்து நடக்க
பிறருக்கு தோள் கொடுத்து உதவ
அறிவியலின் அதீத கண்டுபிடிப்பில்
மறைந்து போன ஆட்டங்கள்
அதை
மறந்தே போன மனிதர்கள்
அதனால்
கலைந்து போன கிராமிய கூட்டங்கள்
ஆதலால்
வறண்டு போன அவர் தம் வாழ்வுகள்
திரைக்கு முன்னாலும் ஆட்டம்
அதன் பின்னாலும் ஆட்டமே
பின்னல்களின் கூட்டணியில்
கரங்கள் கோர்க்க
கதைகள் பிறக்க
செவிகள் ஈர்க்க
காட்சிகள் நிற்க
ரசிகர்கள் களிக்க
நேரம் கழிக்க
காண்ப வரை மகிழ்விக்க
வாய்ப்பும் கிடைக்க
கிடைத்த வருவாயில்
வாழ்வை கடக்க
தோள்கள் மட்டுமே
ஆட்டம் கண்டது
மரணத்திலும்
- Veena
ஆட்டுவிக்கும் கருவி ஒன்று ஆடும்
பொம்மைகள் இரண்டு ..
கருவியின் ஒருங்கிணைந்த
அசைவால் இவை காற்றில்
ஆடுகின்றன..
கொஞ்சம் தடுமாறினாலும்
ஆட்டமிழக்க ,கோஷம் எழும்ப
வேஷம் களையும்..
பலரின் கைதட்டலுக்கு அசையும்
இவை ,அலை அலையாக
எண்ணத்தை தூண்டி பல வடிவம்
பெறும் சிந்திப்பவரின்
மனதில்,கரையும் இனிப்பாக
காணாமல் போகும்.
- Vidhya

No comments:
Post a Comment