காக்கை தட்டிய கமண்டல
நீர் ஆறாய் பாய
மண் கலனின் நீர்
மட்டும் நிற்குமோ?
நீரின் தன்மை
இலக்கை நோக்கி அல்ல
நிலத்தின் வாட்டத்தை பொறுத்தே!
தன்மையில் இளக்கம் உண்டெனில்
இலக்கும் நம் வசம்
ஒவ்வொரு துளியும் தாகம் தீர்க்கும்
கலனில் உள்ளவரை
வீழ்ந்தும் தாகம் தீர்க்கும்
மண்ணில் ஊர்ந்து
செல்லும் உயிரினங்களுக்கு
வீழ்வது சிறப்பல்ல
வீழ்ந்தும் உயிர்த்திருப்பது சிறப்பே!
உயிர்த்திருந்தும் அடுத்தவரை வாழ வைத்து கரைவது சிறப்பே!
விண்கலம் அல்ல இது
வீழ்ந்து தோல்வியடைய
மண் கலன் தானே
மீண்டும் உயிர்பெறும்
வேறொரு வடிவத்தில்
- Veena
கண் இமைக்கும் நேரத்தில்
கைதவறிய தண்ணீர் சோம்பு
தவறிய எதுவும் மீண்டும் வரா
சிந்திய ஒவ்வொரு துளியும்
மண்ணில் கலக்கும்,ஆனால்
தவறிய நொடி, கொட்டிய
வார்த்தைகள்,சிந்திய கண்ணீர்
காலத்தில் மறையும்..
- Vidhya

No comments:
Post a Comment