Friday, January 23, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காக்கை தட்டிய கமண்டல 

நீர் ஆறாய் பாய 

மண் கலனின் நீர்

மட்டும் நிற்குமோ?

நீரின் தன்மை

இலக்கை நோக்கி அல்ல

நிலத்தின் வாட்டத்தை பொறுத்தே!

தன்மையில் இளக்கம் உண்டெனில்

இலக்கும் நம் வசம்


 ஒவ்வொரு துளியும் தாகம் தீர்க்கும்

கலனில் உள்ளவரை 

வீழ்ந்தும் தாகம் தீர்க்கும் 

மண்ணில் ஊர்ந்து

செல்லும் உயிரினங்களுக்கு

வீழ்வது சிறப்பல்ல

வீழ்ந்தும் உயிர்த்திருப்பது சிறப்பே!

உயிர்த்திருந்தும் அடுத்தவரை வாழ வைத்து கரைவது சிறப்பே!

விண்கலம் அல்ல இது

வீழ்ந்து தோல்வியடைய

மண் கலன் தானே

மீண்டும் உயிர்பெறும்

வேறொரு வடிவத்தில்

- Veena 

கண் இமைக்கும் நேரத்தில்

கைதவறிய தண்ணீர் சோம்பு

தவறிய எதுவும் மீண்டும் வரா

சிந்திய ஒவ்வொரு துளியும் 

மண்ணில் கலக்கும்,ஆனால்

 தவறிய நொடி, கொட்டிய

 வார்த்தைகள்,சிந்திய கண்ணீர்

 காலத்தில் மறையும்..

- Vidhya 





No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...