இது போதும் எனக்கு.. இது போதுமே🥰
இனிமையான தனிமை,
மென்மையான இசை,
திகட்டாத தேநீர்,
ஓஷோவின் புத்தகம்...
இது போதும் எனக்கு.. இது போதுமே🥰
-Akhila
அறிவில் பாதி
அறியாமல் பாதி
சிந்தனையில் பாதி
வேதனையில் பாதி
தெளிந்தும் பாதி
தெளிவிற்கு பாதி
அசதியில் பாதி
வசதியால் பாதி
அச்சத்தில் பாதி
துச்சத்தில் பாதி
அமைதியால் பாதி
அவதியால் பாதி
வந்தும் பாதி
வாராமல் பாதி
விழித்தும் பாதி
தொலைத்தும் பாதி
மடியில் பாதி
மார்பில் பாதி
அணைப்பில் பாதி
கசப்பில் பாதி
பாதியில் மீதி
இறப்பின் கதியில்
முதலில் தாய் மடியில் உறங்கிய
அதே அமைதியான
உறக்கம்
கல்லறையில் மட்டுமே
அடக்கம்
- Veena
பிரபஞ்சமே உறங்கும் நேரத்தில்
நித்திரையில் பூத்த அல்லிக்கு
ஒத்திகை எதற்கு!
ஆடை அலங்காரம் தேவையில்லை
இந்த ஒத்தை பூக்கு மேல் என்ன அழகு!
இதழ்களில் மட்டுமா? இல்லை
கண்களும் உதிர்க்கும் கனவின்
காட்சியை காண மெய்சிலிர்க்குதே!
- Vidhya

No comments:
Post a Comment