மழலை கொடுக்கும் ஸ்தானம் அழகு
அதைவிட
அது கொடுக்கும் சிரிப்பு அழகு
அதைவிட
அந்த சிரிப்பில் நாம்
எதனையும் மறப்பது அழகு
அதைவிட
அந்த மறதியும் என்றும் இருக்க நினைப்பது அழகு
அதைவிட
அந்த நினைப்பும் நம்மில் மறவாமல் இருப்பது அழகு
-Veena
நகையும் நகைப்பும் நாடாத மனமில்லை
பகையும் பறக்கும் நகைப்பில்!
இச்சுவை பெறின்,
தேகமும் உயிர்ப்பு பெறும்..
சோகமும் துவண்டு விழும்..
அகமும் மகிழும்..
முகமும் மலரும்.!
இச்சுவை வேண்டின்,
வேண்டாம் பணம்..
வேண்டாம் நாணம்..
வேண்டாம் பதவி..
வேண்டாம் உதவி..
மனம் மட்டுமே வேண்டும்,
மழலை போலே!
-Akhila
கள்ள சிரிப்பு கொள்ளை அழகு
பால் போன்ற அவளின் சிரிப்புக்கு
வான் கூட குடைப்பிடிக்கும்,
தென்னைகள் தலையசைக்க
மைக்கொண்டு தீட்டிய புருவங்கள்
கண்ணை மறைக்க, முத்து
சிரிப்பில் தேன் சிந்துதே, ரோஜா பூ
சிவப்பில் கண்ணங்கள் மிளிர,
திஷ்டிகழிய இவள் அன்னை
நெற்றியில் பொட்டு இட்டாளோ !
- Vidhya

No comments:
Post a Comment