Thursday, January 29, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


மழலை கொடுக்கும் ஸ்தானம் அழகு

அதைவிட

அது கொடுக்கும் சிரிப்பு அழகு

அதைவிட

அந்த சிரிப்பில் நாம்

எதனையும் மறப்பது அழகு

அதைவிட

அந்த மறதியும் என்றும் இருக்க நினைப்பது அழகு

அதைவிட

அந்த நினைப்பும் நம்மில் மறவாமல் இருப்பது அழகு

-Veena

நகையும் நகைப்பும் நாடாத மனமில்லை

பகையும் பறக்கும் நகைப்பில்!


இச்சுவை பெறின்,

தேகமும் உயிர்ப்பு பெறும்..

சோகமும் துவண்டு விழும்..

அகமும் மகிழும்..

முகமும் மலரும்.!


இச்சுவை வேண்டின்,

வேண்டாம் பணம்..

வேண்டாம் நாணம்..

வேண்டாம் பதவி..

வேண்டாம் உதவி..

மனம் மட்டுமே வேண்டும், 

மழலை போலே!

-Akhila 

கள்ள சிரிப்பு கொள்ளை அழகு

பால் போன்ற அவளின் சிரிப்புக்கு

 வான் கூட குடைப்பிடிக்கும்,

 தென்னைகள் தலையசைக்க

மைக்கொண்டு தீட்டிய புருவங்கள்

கண்ணை மறைக்க, முத்து

 சிரிப்பில் தேன் சிந்துதே, ரோஜா பூ

 சிவப்பில் கண்ணங்கள் மிளிர,

 திஷ்டிகழிய இவள் அன்னை

 நெற்றியில் பொட்டு இட்டாளோ !

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...