எண் திசைகளும் நமக்கே சொந்தம்
ஆளும் திறமை உண்டு என்றால்
எவர் வாழ்க்கையும் இப்படியே
திசைக்கு ஒன்றாய் துன்பம் வந்தாலும்
நம்பிக்கை என்று இருந்தால் அடைபடும் அவரவர்
கரங்களில்
வண்டி பாரம்
பெரியதோ?
இல்லை
மன பாரங்கள் பெரியதோ?
வண்டி பாரத்தை இழுக்க
மன வலிமையும் தேவை
இழுத்துப் பிடிக்க
இழுவை சக்தியும் தேவை
இழுத்துக் கொண்டு முன் செல்ல
சில நேரம் பிடி தளர்த்தினால்
அங்கே தேவைப்படும்
திறனும் குறைவே
- Veena
கட்டுக்குள் அடங்கா கோபத்தை
எப்படி அடக்க ,
பாரத்தை விட பலமே தேவை இங்கே
இரண்டு போய் மூன்று,மின்னல்
வேகத்தில் பறக்கும் குதிரைகளை
எத்திசையில் பிடிக்க ,திக்கு
தெரியாத காட்டில் மூர்க்கத்தை
அடக்கும் மார்க்கமோ?
ஒரு அடி நகரா வண்டி நகரும் வழி
என்ன ?
- Vidhya

No comments:
Post a Comment