Monday, January 19, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எண் திசைகளும் நமக்கே சொந்தம்

ஆளும் திறமை உண்டு என்றால்


எவர் வாழ்க்கையும் இப்படியே

திசைக்கு ஒன்றாய் துன்பம் வந்தாலும்

நம்பிக்கை என்று இருந்தால் அடைபடும் அவரவர் 

கரங்களில்


வண்டி பாரம்

 பெரியதோ?

இல்லை

மன பாரங்கள் பெரியதோ?

வண்டி பாரத்தை இழுக்க

மன வலிமையும் தேவை

இழுத்துப் பிடிக்க 

இழுவை சக்தியும் தேவை 

இழுத்துக் கொண்டு முன் செல்ல

சில நேரம் பிடி தளர்த்தினால்

அங்கே தேவைப்படும் 

திறனும் குறைவே

- Veena 

கட்டுக்குள் அடங்கா கோபத்தை

 எப்படி அடக்க ,

பாரத்தை விட பலமே தேவை இங்கே

இரண்டு போய் மூன்று,மின்னல்

 வேகத்தில் பறக்கும் குதிரைகளை

 எத்திசையில் பிடிக்க ,திக்கு

 தெரியாத காட்டில் மூர்க்கத்தை

 அடக்கும் மார்க்கமோ?

ஒரு அடி நகரா வண்டி நகரும் வழி

 என்ன ?

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...