Tuesday, January 20, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வார்த்தையின் அளவு மூளையின் கட்டளையோடு

இயங்கும்

அதன் பிடியிலிருந்து

நழுவி உதிரும் வார்த்தைகளும்

பிறரின் எண்ணத்தைக் குலைக்கும்

சங்கடத்தை உண்டு பண்ணும் எதுவும்

தொடரும் கதையாகும்

மூளை சுருங்கினாலும்

சரியாய் இயங்கினாலும்


சுட்டும் விரலின் ஆதிக்கம் 

வார்த்தையின் அளவிற்காக

ஆணையின் வெளிப்பாட்டில் 

இயங்கும் இரு 

உணர்ச்சிகள்


 சிலைகள் பேசாது என்றும்

அதை வடிவமைக்கும் போதும்

பேசான் அமைப்பாளன்

அவனின் சுய உறுப்பின் 

ஆணையின் படி அவனும்

- Veena 

மௌனம் காத்தால் காலத்தால்

 காயத்தால் காப்பாற்ற வேண்டிய

 முக்கியமான சில உண்மைகளை

 மண்ணோடு மக்க செய்ய

 முடியும்,அதை கொட்டி என்ன பயன்

 அது மீண்டும் நம்மை கொட்டும்..


நிபசத்தத்தில் வரும்  ராகத்தை

 கேட்க மௌனம்

 கொள்ளுங்களேன்,

சத்தம் போடதே பேச தெரியாத

 மனங்கள் இங்கே மௌன

 மொழியில் பேசுதே..

- Vidhya 



1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...