வார்த்தையின் அளவு மூளையின் கட்டளையோடு
இயங்கும்
அதன் பிடியிலிருந்து
நழுவி உதிரும் வார்த்தைகளும்
பிறரின் எண்ணத்தைக் குலைக்கும்
சங்கடத்தை உண்டு பண்ணும் எதுவும்
தொடரும் கதையாகும்
மூளை சுருங்கினாலும்
சரியாய் இயங்கினாலும்
சுட்டும் விரலின் ஆதிக்கம்
வார்த்தையின் அளவிற்காக
ஆணையின் வெளிப்பாட்டில்
இயங்கும் இரு
உணர்ச்சிகள்
சிலைகள் பேசாது என்றும்
அதை வடிவமைக்கும் போதும்
பேசான் அமைப்பாளன்
அவனின் சுய உறுப்பின்
ஆணையின் படி அவனும்
- Veena
மௌனம் காத்தால் காலத்தால்
காயத்தால் காப்பாற்ற வேண்டிய
முக்கியமான சில உண்மைகளை
மண்ணோடு மக்க செய்ய
முடியும்,அதை கொட்டி என்ன பயன்
அது மீண்டும் நம்மை கொட்டும்..
நிபசத்தத்தில் வரும் ராகத்தை
கேட்க மௌனம்
கொள்ளுங்களேன்,
சத்தம் போடதே பேச தெரியாத
மனங்கள் இங்கே மௌன
மொழியில் பேசுதே..
- Vidhya

Very nice ma
ReplyDelete