Saturday, March 13, 2021

சிந்தனைக்குரிய பகுதி_ "ஆசை" by Jaya

 


ஆசையின் ஓசை 

ஓவ்வொருவரின் 

மனதில் இசையாய்

மனதை உயிர்ப்பாய் 

இருக்க செய்யும் 

மனதின் திறவுகோல்!!!


வகை வகையாய் பொருள் ஈட்டிட ஆசையில்லை

ஈகையோடு பிறர்க்கு உதவிட ஆசை 


பகை கொண்டு பிறர் வெல்ல ஆசையில்லை

பகையில்லா உறவு கொண்டு வாழ்ந்திட ஆசை 


நகை நகையாய் வாங்கிப் பூட்டிட ஆசையில்லை 

நகைச்சுவை இழைய மனம் நோகா வாழ்வு வாழ்ந்திட ஆசை 


மிகை வளர்ச்சியின் பின் ஓடிட ஆசையில்லை

தகைமை கொண்டு தளர்ந்து விடாமல் வாழ்ந்திட ஆசை 


அகவை பல கடந்து வாழ்ந்திட ஆசையில்லை

அகம் வென்று அவனியில் அன்பு அழிந்திடாது வாழ்ந்திட ஆசை 


உறவை தொலைக்கும் பணத்தின் பின்னே ஓடிட ஆசையில்லை 

பறவை போல் சுதந்திரமாய் வாழ்ந்திட ஆசை


தான் மட்டும் என ஏகபோக வாழ்வு வாழ்ந்திட ஆசையில்லை

கரம் கோர்த்து நட்புணர்வாய் கூடி வாழ்ந்திட கோடி ஆசை 


புறம் பேசி பொய் சொல்லி வாழ்ந்திட ஆசையில்லை

அறத்தின் வழி நல்வாழ்வு வாழ்ந்திட ஆசை 


மனத்தில் சுகபோகமாய் உண்டுறங்கி வாழ்ந்திட ஆசையில்லை

அகத்தில் இறையுணர்வு கொண்டு வாழ்ந்திட ஆசை 


பெருங்கவலைகள் நமை திண்ண விடாது

சிறுசிறு சந்தோஷங்களால் மனதை 

நிறைத்து நிம்மதியாய் வாழ 

நித்தமும் ஆசை!!!!!!!


1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...