Wednesday, March 17, 2021

தோப்பு by Vidhya Nivash

 


சின்னையா தாத்தாவிற்கு முதலாவதாக ஒரு பேரக் குழந்தை பிறந்தது.பேரன் பிறந்ததின் சந்தோஷத்தின் காரணமாக வீட்டின் பின்புறம் ஆசையாக ஒரு பலாக் கன்றை நட்டு வைத்தார் . பேரன் வளரவளர பலா மரமும் வளர்ந்து கொண்டே வந்தது வருடங்கள் ஓட மரமும் வளர்ந்து செழித்து. அதில் பழுத்த முதல் பலாப்பழத்தை கோவிலுக்கு கொடுத்து அங்கு வரும் சிறுபிள்ளைக்கு ஆசையாக கொடுப்பதே தாத்தாவின் பழக்கம்.இதே போல் ஒவ்வொரு வருடமும் பலாப்பழ சீசன் வரும்போது இதே மாதிரி தானமாகக் கொடுப்பார்.


அடுத்தடுத்த பேரக்குழந்தைகளுக்கும் மாமரம் ,கொய்யா ,தென்னை மரம் என்று கடைசியில் அவர் வீட்டை சுற்றிலும் ஒரு சின்ன தோப்பாக உருவாகிவிட்டது. ஒவ்வொரு மரத்திற்கும் அந்த பேரக்குழந்தைகளின் பெயரையே வைத்து அவர்கள் இல்லாத போது அவர்களுடன் உரையாடுவது போல மரங்களுடன் ஆசையாக பேசி பழகி வந்தார். அனைத்து மரங்களும் குழந்தைகள் சிரிப்பது போல பூத்துக் குலுங்கி எங்கும் பசுமை நிறைந்து வழிந்தது.பேரப்பிள்ளைகள் ஊருக்கு வரும்பொழுது ஆசையாக தானே பழங்களை பறித்துக் கொடுப்பார் .அவருடைய அன்பிற்கு ஏற்றாற்போல் அதிலிருக்கும் பழங்களும் சர்க்கரை போல இனிக்கும் . வருடங்கள் ஓட வயோதிகத்தின் காரணமாக தாத்தாவும் இறந்துவிட்டார்.


முதல் பேரனுக்கு தாத்தாவின் ஞாபகம் வந்தது உடனடியாக ஊருக்கு கிளம்பி சென்றான். எப்பொழுதும் தாத்தா அங்கே நின்று வரவேற்பது போல பாட்டி இன்று, அவர் நின்று சிரிப்பது போல் பலாமரம் வரவேற்க. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் ஆசையாக வளர்த்த பலா மரத்திலிருந்து ஒரு புதிய கன்று தழைத்திருந்தது ஆசைக்கு எல்லையே இல்லை மீண்டும் ஒரு தோப்பு உருவாக காலம் ஆசையாக காத்திருக்கக்கிறது.

6 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...