தலைப்பு : படம் பாருங்கள் பதிவிடுங்கள்
படம் : Akhiladevi Kumaran
From Akhiladevi Kumaran
Grow Green...Else will be doomed in dark☺️
Life - sprouts with hope....shrinks in no time…
LIVE EVERY MOMENT TO THE FULLEST♥️
கதகத கதிரவன்,
அனல் பரப்பும் ஆதவன்,
குளுகுளு coolers சூரியன் ஆனதால்,
இயற்கை அன்னையின்,
1 முதல் 100 வயதுள்ள அனைத்து
வயதினரும் சுற்றி நின்று
களிப்புடன் ஆனந்த நடனம்😍
From Vidhya Nivas
வாழ்க்கை என்பது ஒரு வட்டம்,
வளர வளர மனமும் விரிவடைய வேண்டும்...
இல்லையேல் கருகிவிடுவோம்.
இந்த இலைகள் போல இறந்த பின்னும் பிறருக்கு
பயன்பெற உடல் தானம் செய்வோம்
From Vedavalli Ramani
சூரியனே உன் கருணையால் பிறந்து
படிப்படியாய் வளர்ந்து காய்ந்து
சருகாவது பார்த்து மனிதர்கள் வாழ்வும்
இவ்வளவு தான் என்று இலையாகிய
நான் அறிந்தேன்.நன்றி சூரியனே.
From Sakthi
Everything is beautiful in its own state.
When we understand nature the better,
We understand the being the better.
From Veena Sankar
இலையின் பரிணாமம் , களையிழந்தாலும்
ஆயிரம் கதை சொல்லும், சருகானாலும்
நான் உரமாவேன்
வெப்பதினாலும் காலத்தினாலும் என் நிலை
மாறினாலும் உரமாவேன்
நெருப்பின் வெப்பத்தால்
நான் காலத்தினால் மாறினாலும் மறுபடியும்
உயிர்த்தெழுவேன்
என் சந்ததி மூலம்
சூரியனே!
நான் உயிர்த்தெழுவதும், வாழ்வதும்,
சருகாவதும் உன்னாலே.
நீ மையத்தில் நின்றாலும் இடம் மாறினாலும்
உன் தேவை வேண்டும் எனக்கு.
இலையே! மரத்தினின்று நீ கீழே விழுந்து உன்
ஆயுள் முடிந்தாலும் சில காலம் இலை
என்றழைக்கப்படுகிறாய். ஆனால் மனிதனின்
ஆயுள் முடிந்தால் மறுகணமே பிணம் என்றாகிறான்.
உருவம் மாறினாலும் உன் வடிவம்
மாறுவதில்லை. இது தான் இயற்கையால்
உனக்கு கிடைத்த வெற்றி
பொங்கலன்று சூரியனை பார்த்து
பொங்கலிடுவோம் இங்கே வாழ்க்கை சக்கரத்தை
உணர்த்தும் இலைகளை
பார்த்து சூரியனே இறங்கி வந்திருக்கிறான்.
நான் இவனை சூறையாடினாலும் என்னாலேயே
மீண்டும் பிறக்கிறானே குளு குளு சூரியன்
கிளு கிளு இலையை பார்த்து
ஒற்றுமையே எங்கள் பலம் உயிருள்ள
செடியிலும், உயிரற்ற சருகிலும்

No comments:
Post a Comment