Thursday, April 28, 2022

நடக்குமா வேண்டும் வரம்? குட்டிக் கவிதை By Veena Sankar



நடக்குமா வேண்டும் வரம்?



கலப்படம் இல்லா தண்ணீர் வேண்டும்

கபடம் இல்லா வார்த்தைவேண்டும்

மனதை வருடும் அன்பு வேண்டும்

மானத்தை காக்கும் வீரம் வேண்டும்

குனிவு இல்லா நிலை வேண்டும்

கூன் இல்லா உடல் வேண்டும்

வலி இல்லா பிறப்பு வேண்டும்

வளி இல்லா வாழ்வும் வேண்டும்

வானத்தை வேண்டா வளம் வேண்டும்

வனத்தை அழிக்கா மனம் வேண்டும்

கனவு கொள்ளா தூக்கம் வேண்டும்

களவு கொள்ளா செல்வம் வேண்டும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...