இந்த வார தலைப்பு - ஒளிவட்டம்🌼
Picture by Suganthi
நான்வளர்வதும் தேய் வதும் சூரியனின் பிரதிபலிப்பு.
அதுபோல் வளர்வதும், இளைப்பதும்
உடலின் பிரதிபலிப்பு. ஆன்மாவுக்கு இல்லை.
By Vedavalli Rmani
அண்ணன் ஆதவன் இல்லையென,
பார்க்க சாட்சி இல்லையென,
இரவின் பிடியில், ஜல்சா நினைப்பில்,
நீங்கள் இருந்தால்… மன்னிக்கவும்.
கவனம் பூமிவாழ் மக்களே!
தம்பி மதி நானிருக்கிறேன்!
ஒளிந்து கொள்ள அனுமதி
தராத ஒளிவட்டம் நான்!!
நான் பார்த்துக் கொண்டே
இருப்பேன்-சாட்சியாக!
‘அட போடா…யாருமில்லை’
என நினைக்க வேண்டாம்!
என் ஒரு நாள் விடுப்பில்,
அமாவாசை அன்று,
உங்கள் உடன்பிறப்பு
“மனசாட்சி” இருக்கிறது!
கவனம் பூமிவாழ் மக்களே!
இயற்கை -மிகப் பெரிய சாட்சி!
அதனினும் கூட வருவது மனசாட்சி!!
தவறு செய்யுமுன் சிந்தியுங்கள்!!!
இப்படிக்கு, நிலா
By Akhila Devi Kumaran
தோட்டதின் நடுவில் ஒளிரும் நிலா,
டியூப் லைட் போட்ட மாதிரி எங்கும் வெளிச்சம்,
வெட்ட வெளியில் பாயில் படுத்து நிலவை
ரசித்த ஞாபகம்,
எட்டி பார்த்தாலும் வானமே தெரியாத மாதிரி
வீடுகளின் நெருக்கம் சென்னையில்..
மாதம் மாதம் வந்து பல காட்சிகள் தந்து
அடிமையாக்கி நிலா..
தேடி தேடி பார்க்கிறேன் மறைவாய்
தேடாமல் சில நேரம் முன் வந்து சிரிப்பாய்..
படுக்கையிலிருந்து உன்னை ரசிப்பதே
கோடி பாக்கியம்
By Vidhya Nivas
செந்நிற கூந்தலோடு
மஞ்சள் நிற முகத்தோடு
பச்சை நிற தோட்டத்தை எட்டி பார்க்கும்
பகலவனே உன்னை கண்டு
பகைவனும் மையல் கொள்வான்
நேருக்கு நேர் உன்னை பார்த்து ரசிக்க
முடியாவிட்டாலும் மலையில் ஒளிந்து
கொண்டிருக்கும் உன்னை நானும்
ஓரக்கண்ணால் ரசிக்கிறேன்
இரவில் ஓர் சூரியன் நம்மை பித்தனாக்கி விட்டாள்.
இதோ பக்கத்தில் தான் இருக்கிறாள் இவள் என்று
நினைத்து தொட ஆசைப்பட்டாலும்
தொலைவாகவே செல்கிறாள்
மறையும் முகமா மதியின் முகம் நம் மதியை
விட்டும் நம் மனதை விட்டும்
எட்ட நின்று பார்க்கும் உறவினர் அல்ல.
கிட்டே இருந்து துடிக்கும் தோழர் அல்ல
என் மனதில் லயிக்கும் விருட்சம் நீ
வான் முழுவதும் பால் அருந்தச் செய்தாயோ?
உன் ஒளியால்
பூமி முழுவதும் குளிரச் செய்தாயோ?
உன் பார்வையால்
நீர்நிலைகள் யாவற்றுக்கும் உன் உருவத்தை
கடன் கொடுத்தாயோ?
அது காணாதென்று இந்த தோட்டத்திற்கும் நீ
ஆடையாய் மாற வந்தாயோ?
கடற்கரையில் அமர்ந்த காதலன் அவன் காதலியை
பாடாது உன்னை பாடியதால் அவன் காதல் முறிவு
பெற காரணமானாயோ?
மறுமுறை உன்னை காண அவன் வந்த போது
அன்று அமாவாசை என்று ஏமாற்றம்
கொள்ளச் செய்தாயோ?
ஏன் நிலவே உன்னில் இத்தனை கவர்ச்சியையும்
குளிர்ச்சியையும் யார் தந்தது?
விடை தேடும் வினா போல் இந்த வீணாவும் முழிக்கிறேன்
By Veena Sankar

No comments:
Post a Comment