பட்டுப் புடவைகளும்
தங்க நகைகளும்
சீர் வரிசைகளும்
கொடுத்து அனுப்பும்
இடத்தில்
கண்ணீர் அடைக்கலம் விழியோரம்
பாசம் மட்டும் மனதோரம்
புதிய இடத்தில்
புதிய ஸ்பரிசத்தில்
புதிய காதலில்
எல்லாம் மாறும்
பெண்ணின் உள்ளத்தில்
அவள் பிறந்த இடத்தை
நினைப்பதும் மறப்பதும்
கைபிடித்தவன் கரங்களிலே
பொருள் கொடுத்து
குணம் தேட
வியாபாரம் அல்ல
இது விவாகம்
இன்னாருக்கு இன்னாரே
என்ற சடங்கில்
கொண்ட நம்பிக்கை
யாவும் புதிதில்
விரசம் அறியா
மனங்கள் பந்தாட
பழக பழக
குணங்கள் வெளிப்பட
அவரவர் தவறுகள் அறியப்படுவதும்
திருத்தப்படாமல் போவதும்
தானோ வாழ்க்கை?
அல்ல ! அல்ல!
பாந்தமாய் சாந்தமாய்
காதலாய் பாசமாய்
எதுவும் ஒன்றையொன்று
பிணைந்து காட்டுவதே
திருமண பந்தம்
யார் ஏற்றி விட
யார் வீழ
என்று நினைக்க
போட்டிக்களம் அல்ல
பொதிந்த அன்பில்
பிரிவு கொள்ளா
நிலையில் அனுசரணையால்
இருவரும் அரவணைக்க
அதில் பெறும் மகிழ்ச்சி
கோடி கோடி
இதை அறியாதவர்
வாழ்வும் தெருக்கோடியிலே
- Veena
இது சந்தையும் அல்ல,
விலைபோக பொருளும் அல்ல..
ஒத்தை வார்த்தை வரக்கூடாது,
பட்டுப்போனால் தன் காலில் நிற்க
தந்தவை ...
இருந்தாலும் அவரின்
ருசிக்கு எப்படி மாற ...பலவருடம்
வளர்த்து சட்டென அறுக்க
நினைத்தால் ,என்ன கொடுமை!
உணர்ச்சியின் பிடி விலக சாயம்
போகும்,எதை கொடுத்தும்
எவரையும் நிரப்ப முடியா...
அன்பை ,பண்பை,உறவை,
பழக்கத்தை சரிபாதி பரிமாற்ற
நிலைக்கும் பந்தம்,முதலில்
கர்வத்தை விட எல்லாம்
சமம்,கல்வியை விட சிறந்தது
இல்லை சீராக கொடுக்க!
-Vidhya


















