Friday, February 20, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


செல்லும் பாதை கரடு முரடாக இருந்தாலும்

பாதை என்ற ஒன்று

இருந்தால் போதும்

நம் இலக்கை அடைய

ஏணி தான் வேண்டுமென்பதில்லை

ஓர் திறமை போதுமே

எந்த பாதையையும்

பாலமாய் கொண்டு

சிறப்பாய் கடக்க

- Veena 


நிலவுக்கும், நிலமகளுக்கும் நடுவில்... 

நின்ற என்னை 

நோக்கி, 

நட்சத்திரமா ஜொலித்த

நங்கை நகர்ந்தாள்👧 

கையில் விண்மீன்களுடன்✨️


நன்றியுடன் நகர்ந்தன 

நகல் மீன்கள் - தப்பித்தோம்,

 பிழைத்தோம் என்று!

- Akhila 

வானம் உதிர்த்த விண்மீன்களுக்கு

உயிர்கொடுத்து , அவை விண்ணை

 தொட ஏணியிட்டு,கைபிடித்து

 செல்ல ,அதன் நண்பவர் வந்து

 வரவேற்க ,அரங்கேற்றம்!

- Vidhya 


கதை பேசிய இரவுகள் 

காதல் வளர்த்த இடங்கள் 


உன்னை காணவில்லை என்று கேட்கின்றன 

நீ விண்மீனாய் விண்வெளியில் 

மின்னிக் கொண்டிருக்கிறாய் 


நான் வந்து கொண்டிருக்கிறேன் 

எனக் கண்டு கையசை 


முடிவிலா பேரண்டத்தில் 

முற்று பெறாமல் வாழ்ந்திட


—பிரியா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...