செல்லும் பாதை கரடு முரடாக இருந்தாலும்
பாதை என்ற ஒன்று
இருந்தால் போதும்
நம் இலக்கை அடைய
ஏணி தான் வேண்டுமென்பதில்லை
ஓர் திறமை போதுமே
எந்த பாதையையும்
பாலமாய் கொண்டு
சிறப்பாய் கடக்க
- Veena
நிலவுக்கும், நிலமகளுக்கும் நடுவில்...
நின்ற என்னை
நோக்கி,
நட்சத்திரமா ஜொலித்த
நங்கை நகர்ந்தாள்👧
கையில் விண்மீன்களுடன்✨️
நன்றியுடன் நகர்ந்தன
நகல் மீன்கள் - தப்பித்தோம்,
பிழைத்தோம் என்று!
- Akhila
வானம் உதிர்த்த விண்மீன்களுக்கு
உயிர்கொடுத்து , அவை விண்ணை
தொட ஏணியிட்டு,கைபிடித்து
செல்ல ,அதன் நண்பவர் வந்து
வரவேற்க ,அரங்கேற்றம்!
- Vidhya
கதை பேசிய இரவுகள்
காதல் வளர்த்த இடங்கள்
உன்னை காணவில்லை என்று கேட்கின்றன
நீ விண்மீனாய் விண்வெளியில்
மின்னிக் கொண்டிருக்கிறாய்
நான் வந்து கொண்டிருக்கிறேன்
எனக் கண்டு கையசை
முடிவிலா பேரண்டத்தில்
முற்று பெறாமல் வாழ்ந்திட
—பிரியா

No comments:
Post a Comment