Tuesday, February 24, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


விழிகள் ஈர்த்து

காதல் பூக்க

மனம் லயிக்க

கரங்கள் அணைக்க

கண்களில் ஏனோ 

கண்ணீர் மல்க

இதயம் வலிக்க

மார்பில் சாய

காரணம் அறியாது

துணை ஆதரிக்க

இதழ்கள் விரித்து

வார்த்தை வாராது

மங்கை தவிக்க

கேசம் வருடி

நெற்றியில் அவன்

இதழ் பதித்து 

ஆசுவாசப் படுத்த

போர்வீரன் அவன் ஆற்றாமையின் வெளிப்பாடு 

வாழ்வும் காதலும்

தொலைவில் இருக்க

புதுமணம் மட்டும்

மணம் வீசாமல்  

மண பந்தத்தில் தோற்றும் 

அவன் புறப்பட்டான்

 களம் நோக்கி 

வடிந்த நீரில்

தியாகம் ஒளிர்ந்தது

கண் துடைத்து

அவளும் அவனுக்கு

செந்நிற திலகமிட

துக்கம் வெளிப்பட

புன்னகை பூத்தும்

இறுதியில் உறுதியாய்

அனுப்பி வைத்தாள் 

அவனை தானும்

வீர மங்கை என

- Veena 

இது திரையில் வரும் காட்சி

நிஜத்தில் நடந்தால் வரமே

அழுகை க.மு செல்லம் 

க.பி நடிப்பு ..

உணர்ச்சி வசப்படல் பலவீனம்..

பலவீனத்தின் பயம் அழுகை!

அழுகையின் ஆளுமை வலியின்

 வெளிப்பாடு ..

வலிக்காமல் இருத்தல் சாத்தியமா..

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...