விழிகள் ஈர்த்து
காதல் பூக்க
மனம் லயிக்க
கரங்கள் அணைக்க
கண்களில் ஏனோ
கண்ணீர் மல்க
இதயம் வலிக்க
மார்பில் சாய
காரணம் அறியாது
துணை ஆதரிக்க
இதழ்கள் விரித்து
வார்த்தை வாராது
மங்கை தவிக்க
கேசம் வருடி
நெற்றியில் அவன்
இதழ் பதித்து
ஆசுவாசப் படுத்த
போர்வீரன் அவன் ஆற்றாமையின் வெளிப்பாடு
வாழ்வும் காதலும்
தொலைவில் இருக்க
புதுமணம் மட்டும்
மணம் வீசாமல்
மண பந்தத்தில் தோற்றும்
அவன் புறப்பட்டான்
களம் நோக்கி
வடிந்த நீரில்
தியாகம் ஒளிர்ந்தது
கண் துடைத்து
அவளும் அவனுக்கு
செந்நிற திலகமிட
துக்கம் வெளிப்பட
புன்னகை பூத்தும்
இறுதியில் உறுதியாய்
அனுப்பி வைத்தாள்
அவனை தானும்
வீர மங்கை என
- Veena
இது திரையில் வரும் காட்சி
நிஜத்தில் நடந்தால் வரமே
அழுகை க.மு செல்லம்
க.பி நடிப்பு ..
உணர்ச்சி வசப்படல் பலவீனம்..
பலவீனத்தின் பயம் அழுகை!
அழுகையின் ஆளுமை வலியின்
வெளிப்பாடு ..
வலிக்காமல் இருத்தல் சாத்தியமா..
- Vidhya

No comments:
Post a Comment