Friday, February 6, 2026

படமும் கருத்தும் by Winmeengal



 செதுக்குவது சிறப்பு;

அதனினும் சிறப்பு- ஆர்வத்துடன் கற்பது!📚


உருவாக்குவது உயர்வு;

அதனினும் உயர்வு-

உயர தயாரா இருப்பது!

🕊


அக்கால சிறப்பும், உயர்வும் 

இக்கால நுண்ணறிவு யுகத்தில்.....தலைகீழ்!🙃


இந்த தலைமுறை 

வைரமாகத் தயாரா?

உளியின் வலியைத் தாங்கத் தயாரா?

சிந்திக்கிறேன்🤔

நிந்திக்கிறேன்😫

மௌனிக்கிறேன் 🤐

- Akhila 


 சுத்தியலின் 

அழுத்தம் தாங்கவே உளி

உளியின் முனை தாங்கவே கல் 

கல்லின் திடம் கொண்டே சிற்பம்

சிற்பமும் வடிப்பவனின் திறன் கொண்டே 


அழுத்தத்தின் ஊடே

பிறக்கும் கலை

ரசிப்பவனின் கண்களுக்கே


 குடைவதில் வலி யாருக்கு?

பாறைக்கா?

இரு பக்கங்கள் வலி 

தாங்கும் உளிக்கா ?

அதை உருவாக்க 

நினைக்கும் மனிதனின் கரங்களுக்கா?

- Veena 

கல்லும் பூக்கும்,மின்னும் கல்வி

 எனும் உளி கொண்டு செதுக்க,

கடுமையான பாறையை செதுக்க

 வலுவும்,கூரிய உளியும் தேவை

 அதை முறையாக கல்வி கொண்டு

 பட்டைதீட்ட ,வைரமாக ஜோலிக்க

 சிந்திப்பீர் ,வலிக்காமல் சிலையும்

 உருபெறாது ,வியர்வை சிந்தாமல்

 சில்லறையும் கிடைக்காது..

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...