செதுக்குவது சிறப்பு;
அதனினும் சிறப்பு- ஆர்வத்துடன் கற்பது!📚
உருவாக்குவது உயர்வு;
அதனினும் உயர்வு-
உயர தயாரா இருப்பது!
🕊
அக்கால சிறப்பும், உயர்வும்
இக்கால நுண்ணறிவு யுகத்தில்.....தலைகீழ்!🙃
இந்த தலைமுறை
வைரமாகத் தயாரா?
உளியின் வலியைத் தாங்கத் தயாரா?
சிந்திக்கிறேன்🤔
நிந்திக்கிறேன்😫
மௌனிக்கிறேன் 🤐
- Akhila
சுத்தியலின்
அழுத்தம் தாங்கவே உளி
உளியின் முனை தாங்கவே கல்
கல்லின் திடம் கொண்டே சிற்பம்
சிற்பமும் வடிப்பவனின் திறன் கொண்டே
அழுத்தத்தின் ஊடே
பிறக்கும் கலை
ரசிப்பவனின் கண்களுக்கே
குடைவதில் வலி யாருக்கு?
பாறைக்கா?
இரு பக்கங்கள் வலி
தாங்கும் உளிக்கா ?
அதை உருவாக்க
நினைக்கும் மனிதனின் கரங்களுக்கா?
- Veena
கல்லும் பூக்கும்,மின்னும் கல்வி
எனும் உளி கொண்டு செதுக்க,
கடுமையான பாறையை செதுக்க
வலுவும்,கூரிய உளியும் தேவை
அதை முறையாக கல்வி கொண்டு
பட்டைதீட்ட ,வைரமாக ஜோலிக்க
சிந்திப்பீர் ,வலிக்காமல் சிலையும்
உருபெறாது ,வியர்வை சிந்தாமல்
சில்லறையும் கிடைக்காது..
- Vidhya

No comments:
Post a Comment