Thursday, February 12, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பூவையின் கையில் பூங்கொத்து

எவர் பெற காத்திருக்கிறது?

வருபவன் பூங்கொத்தை பற்றாமல்

பூங்கொடியை பற்றுவான்

அழகின் சிரிப்பை

தவற விடுவாரோ?

மனதின் சிறப்பை

அறியாமல் இருப்பாரோ?

காதலின் வெற்றி 

சேர்வதில் மட்டுமல்ல

இணையாமல் போவதிலும் உண்டு

எங்ஙனம் என்ற வினாவிற்கு

விடையும் உண்டு

காதல் என்றும் விலகி நிற்குமே 

தவிர அழிவதில்லை


 பெண்ணோவியம்

 நிஜத்தில் அல்ல நிழலாய்

நிஜம் விலகி நிழல்

பேசுகிறது

பார்வைக்கு அழகாய் இரு

கேள்வியில் அறிவாய் இரு

நிஜத்தில் கர்வமாய் இரு

பெண் என்றாலே

நிஜத்தில் நிழலாய்

நிழலில் நிஜமாய்

வாழ்பவளே!


ஆணின் கைவண்ணத்தில் 

அவன் காணும் காட்சியில் கூட

பெண்ணை சிரிக்க வைத்தே

காட்டுகிறான்

பூவிதழின் மொழி

 மலருக்கு தெரியுமோ?

ஆனால்

ஆணிற்கு தெரியும்

பூப்பாவையின் மொழி

என்றும் அவள் இனித்திருக்க 

தான் ரசித்து நிற்க

ஓர் வழி அவள்

உள்ளத்தில் என்றும்

நிறைவாய் நிற்பதன்றி

வேறொன்றுமில்லை

- Veena 

இவள் பொம்மையோ

கைவண்ணத்தில் முளைத்த

 தேவதையோ..

மஞ்சள் வண்ண கார்குழலியின்

 கண்கள் சிமிட்டி சிமிட்டி பேச,

 பூக்கள் வெட்கப்படுதே! 

- Vidhya 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...