Wednesday, February 11, 2026

படமும் கருத்தும் by winmeengal



பணம் என்றும் கனமே!அது மிகின் வராதோ தலைக்கனம்?!


இது தலைகீழ் ஆயினும்-

மதிப்பில் குறையுண்டோ?!


பல சமயங்கள்- இவன் வருவான் - பிம்பம் எழ;

சில சமயங்கள்- இவன் வருவான் -மனிதம் வீழ!


எது எப்படியோ, 

இவனன்றி ஓரணுவும் அசையாது!!!!

- Akhila 


 செல்லாக் காசானாலும் நான்

 உயிர்த்திருப்பேன் அருங்காட்சியிலே


 நாணயமும் நாணுதோ ?

ஓர் பக்கம் காட்டி 

மறுபக்கம் மறைத்து

தன் மதிப்பிழந்ததோ?

சட்டைபையில் இல்லாவிட்டால்

சட்டமும் மதிக்குமோ?

எவர் வாழ நாணயத்தின் ஆட்டம்

நாணயம் இழந்து தவிக்கும் ஞாலம்


 விசையினால் நின்றதோ ?

பசையினால் நின்றதோ?

- Veena 

நாணயத்திற்கே  நாணயம் கற்று

 தரும் உலகு!

பெரியவனுக்கே மதிப்பில்லை இந்த

 சின்னவனின் தேவையின் போது,

இக்கட்டில் கைக்கொடுப்பான்..

காகிதத்தை விட இந்த ஒற்றை

நாணயனே நாயகன் குழந்தை

 முதல் பெரியவர் வரை,

எல்லோரும் தன்னிடம்

 ஏந்தியவருக்கும் ,தாம் ஏந்திய

 இடத்திலும் அன்பாக

 பரிமாறாக்கூடியவன்,

சபையில் பல பூஜ்ஜியகாரருக்கு

 கனம் கொடுப்பவன் !

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...