பணம் என்றும் கனமே!அது மிகின் வராதோ தலைக்கனம்?!
இது தலைகீழ் ஆயினும்-
மதிப்பில் குறையுண்டோ?!
பல சமயங்கள்- இவன் வருவான் - பிம்பம் எழ;
சில சமயங்கள்- இவன் வருவான் -மனிதம் வீழ!
எது எப்படியோ,
இவனன்றி ஓரணுவும் அசையாது!!!!
- Akhila
செல்லாக் காசானாலும் நான்
உயிர்த்திருப்பேன் அருங்காட்சியிலே
நாணயமும் நாணுதோ ?
ஓர் பக்கம் காட்டி
மறுபக்கம் மறைத்து
தன் மதிப்பிழந்ததோ?
சட்டைபையில் இல்லாவிட்டால்
சட்டமும் மதிக்குமோ?
எவர் வாழ நாணயத்தின் ஆட்டம்
நாணயம் இழந்து தவிக்கும் ஞாலம்
விசையினால் நின்றதோ ?
பசையினால் நின்றதோ?
- Veena
நாணயத்திற்கே நாணயம் கற்று
தரும் உலகு!
பெரியவனுக்கே மதிப்பில்லை இந்த
சின்னவனின் தேவையின் போது,
இக்கட்டில் கைக்கொடுப்பான்..
காகிதத்தை விட இந்த ஒற்றை
நாணயனே நாயகன் குழந்தை
முதல் பெரியவர் வரை,
எல்லோரும் தன்னிடம்
ஏந்தியவருக்கும் ,தாம் ஏந்திய
இடத்திலும் அன்பாக
பரிமாறாக்கூடியவன்,
சபையில் பல பூஜ்ஜியகாரருக்கு
கனம் கொடுப்பவன் !
- Vidhya

No comments:
Post a Comment