Thursday, February 5, 2026

படமும் கருத்தும் by Winmeengal

 


பெண்ணே...

கனவில் பிறந்து கண்ணில் நுழைந்தாய்!


கண்ணே...

விண்ணில் நனைந்து 

மண்ணில் கலந்தாய்!


பறக்கும் அனைத்தும்

தரையிறங்கியே தீர வேண்டும்!!!


நியூட்டன் விதி மட்டுமல்ல- 

கர்மாவின் நியதியும்,

கர்வத்தின் நீதியும்,

இயற்கையின் நியதியும் அதுவே!!!

- Akhila 


 பட்டாம்பூச்சியாய் விரிந்தது

அவள் கனவுகள்

பூச்செடிகள் நிறைந்த தோட்டத்தில் மட்டுமல்ல

உயர் வானில் 

பறக்கவும் ஆசையே அவளுக்கு 

தோட்டத்து வண்ண

 செடிகள் போல

அவள் பல நிறங்களாய் 

உருப்பெற்றாள் 

எத்தனை வடிவம் எடுத்தாலும்

அவள் மனம் 

ஓர் குழந்தையே!

சந்தர்ப்பத்தின் ஊடே

அவள் கொள்ளும்

குணமும்

அவள் மனப்பிரதிபலிப்பு அல்ல

அவள் நிலை எவர் 

கொண்டாலும் அக்கணமே உணர்வர் அவர் தம்

தவறை

தவழும் போது நடக்கவும்

நடக்கும் போது ஓடவும்

ஓடும் போது தாவவும் 

தாவும் போது உச்சியை தொடவும் அறிந்தவள்

 அவள் அன்றி 

வேறு எவர்?

- Veena 

பறக்க துடிக்கின்றன கண்கள்

பறக்க பறக்க பட்டாம்பூச்சியாக

 பறக்க பறக்க வண்ண தூரிகை

 கொண்டு கோலமிட வட்டமாக

 வட்டமாக சுழலும் விழிகள் விதிகள்

 இல்லா வழியை தேட

 விழி திறக்க

 வழியும்  பிறக்க

 பறக்க தோணுதே!

 - Vidhya 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...