பெண்ணே...
கனவில் பிறந்து கண்ணில் நுழைந்தாய்!
கண்ணே...
விண்ணில் நனைந்து
மண்ணில் கலந்தாய்!
பறக்கும் அனைத்தும்
தரையிறங்கியே தீர வேண்டும்!!!
நியூட்டன் விதி மட்டுமல்ல-
கர்மாவின் நியதியும்,
கர்வத்தின் நீதியும்,
இயற்கையின் நியதியும் அதுவே!!!
- Akhila
பட்டாம்பூச்சியாய் விரிந்தது
அவள் கனவுகள்
பூச்செடிகள் நிறைந்த தோட்டத்தில் மட்டுமல்ல
உயர் வானில்
பறக்கவும் ஆசையே அவளுக்கு
தோட்டத்து வண்ண
செடிகள் போல
அவள் பல நிறங்களாய்
உருப்பெற்றாள்
எத்தனை வடிவம் எடுத்தாலும்
அவள் மனம்
ஓர் குழந்தையே!
சந்தர்ப்பத்தின் ஊடே
அவள் கொள்ளும்
குணமும்
அவள் மனப்பிரதிபலிப்பு அல்ல
அவள் நிலை எவர்
கொண்டாலும் அக்கணமே உணர்வர் அவர் தம்
தவறை
தவழும் போது நடக்கவும்
நடக்கும் போது ஓடவும்
ஓடும் போது தாவவும்
தாவும் போது உச்சியை தொடவும் அறிந்தவள்
அவள் அன்றி
வேறு எவர்?
- Veena
பறக்க துடிக்கின்றன கண்கள்
பறக்க பறக்க பட்டாம்பூச்சியாக
பறக்க பறக்க வண்ண தூரிகை
கொண்டு கோலமிட வட்டமாக
வட்டமாக சுழலும் விழிகள் விதிகள்
இல்லா வழியை தேட
விழி திறக்க
வழியும் பிறக்க
பறக்க தோணுதே!
- Vidhya

No comments:
Post a Comment