எங்கும் பசுமை
ஏங்குகிறது மனம்
மூன்றும் குளுமை
முயன்றதால் அழகு
ஆங்காங்கே சிவப்பு
அங்கலாய்க்க வைக்கிறது
கதிரவனின் ஒளியில்
கரையும் எவையும்
உயிரும் அங்கே
உயரும் சுவையிலே
காட்சிகள் நின்றன
ஆட்சி கொள்ள
வளர்ச்சி பெருக
கவர்ச்சி கண்களுக்கு
பசிக்காக புசிக்க,
பிடிக்க எண்ணி
கிள்ளை என் கையில்
கனியோ மரத்தில்
வேண்டியது அகப்படாமல்
வெறுமையாய் திரும்பினேன்
மரம் சொன்னது கிளியிடம்
"உனக்காக நான் என்றும் நிழலாய்" என்று
கிளி சொன்னது கொய்யாப்பழத்திடம்
"என் பசிக்காக நீ " என்று
பழம் சொன்னது இருவரிடமும்
" உங்கள் இருவர நிறமும்" எனக்கு என்று
- Veena
ஆஹா கொத்து கொத்தாக காய்த்து
தொங்கும் கொய்யா..
கொய்யாவிலே மயங்கிய கிளிகள்
எதை தின்பது என்று தெரியாமல்..
பசிக்கவும் இல்லை,புசிக்கவும்
இல்லை!
ஒன்றை சண்டை போட்டு தின்றே
பழக்கம், பார்த்ததிலே திணற
கிளிகள்,ஏக்கமாக பார்க்கும்
கொய்யா!
- Vidhya

No comments:
Post a Comment