Monday, February 23, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எங்கும் பசுமை

ஏங்குகிறது மனம் 

மூன்றும் குளுமை

முயன்றதால் அழகு

ஆங்காங்கே சிவப்பு

அங்கலாய்க்க வைக்கிறது

கதிரவனின் ஒளியில்

கரையும் எவையும்

உயிரும் அங்கே

உயரும் சுவையிலே 

காட்சிகள் நின்றன 

ஆட்சி கொள்ள 

வளர்ச்சி பெருக

கவர்ச்சி கண்களுக்கு

பசிக்காக புசிக்க,

 பிடிக்க எண்ணி

கிள்ளை என் கையில்

கனியோ மரத்தில்

வேண்டியது அகப்படாமல்

வெறுமையாய் திரும்பினேன்


 மரம் சொன்னது கிளியிடம்


"உனக்காக நான் என்றும் நிழலாய்" என்று


கிளி சொன்னது கொய்யாப்பழத்திடம் 


"என் பசிக்காக நீ " என்று 


பழம் சொன்னது இருவரிடமும்


" உங்கள் இருவர நிறமும்" எனக்கு என்று

- Veena

ஆஹா கொத்து கொத்தாக காய்த்து

 தொங்கும்  கொய்யா..

கொய்யாவிலே மயங்கிய கிளிகள்

எதை தின்பது என்று தெரியாமல்..

பசிக்கவும் இல்லை,புசிக்கவும்

 இல்லை!

ஒன்றை சண்டை போட்டு தின்றே

 பழக்கம், பார்த்ததிலே திணற

 கிளிகள்,ஏக்கமாக பார்க்கும்

 கொய்யா!

- Vidhya 




No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...