இலையிலும் பசியாற்றும்
இலையும் பசியாற்றும்
ஆற்றும் இடம் மட்டும்
உள்ளே வெளியே
ஆட்டம் முடிந்தால்
ஓட்டம் விடும்
ஆட்கள்
உறவில் மட்டுமல்ல
உண்ட இடத்திலும்
பசிக்கான உணவு
இங்கே
ஆடம்பரமானதால்
பசியாற்றியது பந்தி
முடிந்த பின்னும்
குப்பைத் தொட்டியை
எதிர்ப்பார்த்து நிற்கும்
உயிர்களுக்கு
உறவுக்கு கை
கொடுக்கும் நிலையில்
உதிர்ந்த இலைகள்
அதே உறவின்
மரியாதை எனும் பிரிவினையால்
பசி உண்டோ இல்லையோ
முந்திட வேண்டும்
இங்கே
ஏமாற்றத்தை தடுக்க
பதார்த்தங்களின் அணிவகுப்பில்
பந்தி இலையும்
அழகானது
உண்ட பின் மட்டும்
முரண்பாடு
காரணம் அறிய
என்னுள் கேட்டேன்
ஒரு சாண் வயிற்றில்
கொள்ளும் அளவு
மட்டும் மிகையோ?
மண் தரையில் அமர்ந்து
பந்தியில்
தலை வாழை இலையில்
சோறு இட்டு
பந்தங்கள் ஒன்று
சேர அமர்ந்து
வாய்ச் சொல்லில்
வென்று வெற்றியாளனை
கண்ட இடம் இதுவே
முன் கண்ட காலம்
அல்ல இது
அவசர கதியில்
வருகை பதிவினையும் கொடுத்து
ஓட்டம் எடுத்து
பந்தயத்தில் வெற்றி
பெற நினைக்கும்
பந்தயக் களமும் இதுவே
- Veena
தலை வாழை
-தமிழரின் விருந்து ராணி👸
என்றும் இவளுக்கு நாங்க ஜொள்ளு விடுவோம்😂
இன்றும் இவளுக்கு
பல விதம்- பல ரகங்கள்
மேக்கப் போடுவோம்🥰
மேசைக்கு வருமுன்
அமோகமாக கொண்டாடுவோம்🥳
காரியம் ஆனபின் தூக்கி எறிவோம்-
பல வடிவங்களில்,
பல வண்ணங்களில், ப்ளாஸ்டிக் சிங்காரியை ரசிப்போம்- ருசிப்போம்😅
நாங்க அப்படித் தான்😎
- Akhila
உறவை ,குணத்தை வாழையில்
வைத்தவனே ,வாழையடி வாழை
என்றான்..
பந்திக்கு முன் அவசரம் ,ஆவல்,பசி
ருசியை மறக்க ..
பின் வயிறு புடைக்க,போனது
வந்தது காதில் ஏற,மண்டை
வெடிக்க,புத்தி மந்தமாக,
கைகழுவிய கையோடு,
சொல்லாமல் சென்றபந்தம்..
- Vidhya

No comments:
Post a Comment