Tuesday, February 3, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


இலையிலும் பசியாற்றும் 

இலையும் பசியாற்றும்

ஆற்றும் இடம் மட்டும்

உள்ளே வெளியே


ஆட்டம் முடிந்தால்

 ஓட்டம் விடும்

ஆட்கள்

உறவில் மட்டுமல்ல

உண்ட இடத்திலும்


 பசிக்கான உணவு

இங்கே

ஆடம்பரமானதால் 

பசியாற்றியது பந்தி 

முடிந்த பின்னும்

குப்பைத் தொட்டியை

எதிர்ப்பார்த்து நிற்கும் 

உயிர்களுக்கு


 உறவுக்கு கை

 கொடுக்கும் நிலையில்

உதிர்ந்த இலைகள்

அதே உறவின்

மரியாதை எனும் பிரிவினையால்


பசி உண்டோ இல்லையோ 

முந்திட வேண்டும்

இங்கே

ஏமாற்றத்தை தடுக்க

பதார்த்தங்களின் அணிவகுப்பில்

பந்தி இலையும் 

அழகானது

உண்ட பின் மட்டும் 

முரண்பாடு

காரணம் அறிய 

என்னுள் கேட்டேன்

ஒரு சாண் வயிற்றில்

கொள்ளும் அளவு

மட்டும் மிகையோ?


 மண் தரையில் அமர்ந்து

பந்தியில் 

தலை வாழை இலையில்

சோறு இட்டு

பந்தங்கள் ஒன்று

 சேர அமர்ந்து

வாய்ச் சொல்லில் 

வென்று வெற்றியாளனை 

கண்ட இடம் இதுவே

முன் கண்ட காலம்

அல்ல இது

அவசர கதியில்

வருகை பதிவினையும் கொடுத்து

ஓட்டம் எடுத்து

பந்தயத்தில் வெற்றி

பெற நினைக்கும்

பந்தயக் களமும் இதுவே

- Veena 


லை வாழை

-தமிழரின் விருந்து ராணி👸


என்றும் இவளுக்கு நாங்க ஜொள்ளு விடுவோம்😂


இன்றும் இவளுக்கு

பல விதம்- பல ரகங்கள்

மேக்கப் போடுவோம்🥰


மேசைக்கு வருமுன் 

அமோகமாக கொண்டாடுவோம்🥳


காரியம் ஆனபின் தூக்கி எறிவோம்- 

பல வடிவங்களில்,

பல வண்ணங்களில், ப்ளாஸ்டிக் சிங்காரியை ரசிப்போம்- ருசிப்போம்😅

நாங்க அப்படித் தான்😎

- Akhila 

உறவை ,குணத்தை  வாழையில்

 வைத்தவனே ,வாழையடி வாழை

 என்றான்..

பந்திக்கு முன் அவசரம் ,ஆவல்,பசி

 ருசியை மறக்க ..

பின் வயிறு புடைக்க,போனது

 வந்தது காதில் ஏற,மண்டை

 வெடிக்க,புத்தி மந்தமாக, 

கைகழுவிய கையோடு,

சொல்லாமல் சென்றபந்தம்..

-   Vidhya 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...