Monday, February 9, 2026

படமும் கருத்தும் by winmeengal



அடையாளச் சின்னங்கள் - 

ஒன்று பார்வை குறை தீர்க்க;

ஒன்று ஆண்மை 

கெத்து காட்ட!


குறையும், நிறையும் 

கை கோர்த்தால்- 

இரண்டுமே அழகு தான் - 

பிறரிடம் மரியாதையும்,

சமத்துவ எண்ணம் கொண்ட மகற்கு!!

- Akhila 


 ஆண் மகனின் அடையாளம்

இப்போது அழகு நிலையங்களில் மட்டும்


 ஆண்களின் உச்ச கட்ட அழகு சாதனம்

கறுப்பு கண்ணாடியும்

முறுக்கு மீசையும்


கறுப்பு யாருக்கும் தராது வெறுப்பு

பார்வை என்றும் கண்ணின் பொறுப்பு

கண்ணாடி அழகே எதிரே 

காணும் காட்சிக்கு

அவரவர் பார்வை காட்டும் காட்சி ரகசியமாய் 

மனதில் அடக்கம்

இவனும் மீசைக்கார நண்பனுடன் சேரும்

போது முகமும் ரம்மியமே!

அடர்த்தியான மீசையும்

பார்வைக்கு அழகே!

சில நேரம் பாவைக்கும் 

ஈர்ப்பு தருமே!

மீசையில்லா பாரதியும்

கண்ணாடி அணியா காளையும் எதிரே

 நின்றாலும் வீண் தானே

கன்னி பெண்களிடத்து!

- Veena 

இக்கால பாரதியோ !

அவருக்கும் கண்ணாடி போட்டு

 கண்ணை மூட

 சொல்லுக்கின்றனரோ!

மீசை என்றால் பாரதி

இன்று பூனைக்கும் மீசை உண்டு

ரோஷம் இல்லா வேசம் போட

அதுவும் பொய் மீசை பொல்லாதது!

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...