Monday, February 2, 2026

படமும் கருத்தும் by Winmeengal

 


செல்லாக் காசுகள் 

தரையில் இருந்தால் என்ன

கையில் இருந்தால் என்ன?


நகரும் வாழ்விற்காக

ஓடும் மனங்கள்


 வாக்காளர்களின் இடத்தில் தஞ்சம் கொள்ள 

இருந்த நோட்டுக்கள் இங்கே

அமைதியாய் சிரிக்கின்றன 

அல்லோலப்படும் என் நிலையை

எண்ணியாவது திருந்துங்கள்

மனித மனங்களே என்று


எதற்கும் மதிப்பில்லை

இவனுக்கு அல்லாது

இவருக்கே மதிப்பில்லை

என்றாகும் போது

எதற்கு மதிப்பு கொடுக்கும்

இவ்வினம்?

அன்பு

பாசம்

மனிதநேயம்

மட்டுமே என்றும் வெல்லும்


எவர் வாழ நீ இறந்தாய் பணமே?

எதை இழக்க நீ மறந்தாய் மனமே?

பிறப்பு உண்டெனில்

இறப்பும் உண்டு

காலம் மட்டுமே

நிர்ணயயிக்கும் 

இதை


 பாராட்டி 

தாலாட்டி 

சீராட்டி 

வளர்த்தவனை

தெருவில் விட்டாயோ?

அவனை என்ன பாடு தான் படுத்தினாயோ?

இல்லத்தில் இடம்

கொள்ளாமல் 

இடம் மாறி இறைந்து நின்றாயோ?

களவாடும் கள்வன்

இல்லை என்பதால்

சிரித்து வீழ்ந்து

கிடந்தாயோ?


இல்லை


உன் வருகையால்

மனித நேயம் மறந்து

மன நிம்மதி இழந்து

உன்னை அனாதையாக்கினானோ?

கொண்ட வரை 

போதும் என்ற எண்ணம் கொண்டானோ?

உன் பின்னால்

மடத்தனமாய் ஓடி

மந்தியாய் மாறியதால்

உன்னை வீசி

எறிந்தானோ?

வாரி கொடுத்தும் 

இருக்கை கிட்டாமல்

போனதால் உன்னை

கை விட்டானோ?


இருக்கும் இடத்தில் மதிப்பு

இல்லாதவனிடத்தில் தவிப்பு

இதுவே வாழ்வின் அமைப்பு

கொள்ளவும் கொண்டாடவும்

வேண்டுமோ இவனை?

- Veena 


!!மனிதர்கள் தேவை!!


பணம் ருசிக்க, செல்வம் சுவைக்க,

அன்பின் பாதையில் சலிப்படைந்தோர், உடனடியாகத் தேவை!!


அனுகவும்:


செல்வராஜா,

அம்பானி இல்லம்,

கோடீஸ்வரர் தெரு,

குபேரன் நகர்,

சீனப்பட்டினம்.

- Akhila 

உழைத்தவருக்கோ அது சொந்தம்

 இல்லை

சொந்தமானவருக்கு செலவழிக்க

 உரிமையில்லை,மொத்ததில் அது

 குப்பை,அதை திங்கக்கூட முடியாது

 என்று எந்த கழுதையும்

 சீண்டவில்லை!

பணம் குப்பையிலே உழைப்பு

 அடகுகடையிலே எதைக்கொண்டு

 மீட்க விட்டதை!

எல்லாம் டிஜிட்டல் மயம்

திருடக்கூட என்ஜினியரிங் படிக்க

 வேண்டுமோ,அங்கு இருந்து தானே

 வந்தேன் இனி ...மரத்தை நடு!

- Vidhya 




No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...