இதழ்களின் முத்தம்
விடுக்கவில்லை சத்தம்
இதழ்களில் சலனம்
ரசிப்பவர் பார்வை சரணம்
எங்கே காதல் என்பதல்ல
எதனுடன் என்பது பொருளே!
நீரில் பயணம் அடங்கியது தாகம்
வண்டினங்கள் மட்டும்
காதல் கொள்ளுமோ
பூக்களிடத்தில்?
சரியான நேரம்
சொல்லும் அமைதியான முறையில்
காதல் கொள் என்று
- Veena
அழகோ அழகு
மெதுவாக அசைந்து
மெல்ல இதழ் திறக்க
மணிக்கணக்காக காத்திருந்த
தருணம் இதுவோ,
பூமியே மயங்கி கிறங்க
நாம் யார் வசம்
கண்போரின் கண்கள் விரிய
மெல்ல விரிந்த இரு உள்ளம்,
நீரில் மூழ்கின பிம்பம்
பிரபஞ்சத்தை இழுக்குதே!
- Vidhya

No comments:
Post a Comment