Tuesday, February 10, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இதழ்களின் முத்தம்

விடுக்கவில்லை சத்தம்

இதழ்களில் சலனம்

ரசிப்பவர் பார்வை சரணம்

எங்கே காதல் என்பதல்ல

எதனுடன் என்பது பொருளே!

நீரில் பயணம் அடங்கியது தாகம்

வண்டினங்கள் மட்டும் 

காதல் கொள்ளுமோ

பூக்களிடத்தில்?

சரியான நேரம் 

சொல்லும் அமைதியான முறையில் 

காதல் கொள் என்று

- Veena

அழகோ அழகு

மெதுவாக அசைந்து

 மெல்ல இதழ் திறக்க 

மணிக்கணக்காக காத்திருந்த 

தருணம் இதுவோ,

பூமியே மயங்கி கிறங்க 

நாம் யார் வசம்

கண்போரின் கண்கள் விரிய 

மெல்ல விரிந்த இரு உள்ளம்,

நீரில் மூழ்கின பிம்பம் 

பிரபஞ்சத்தை இழுக்குதே!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...