Sunday, February 15, 2026

இன்றைய நகைச்சுவை by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை


தூங்கும் போது குறட்டை நம்மிடம் அனுமதி கேட்டு கொண்டு வருவதல்லை. அது அசதியினாலும் ஆழ்ந்த உறக்கத்திலும் வருவதாய் கொள்ளலாம். அப்படி குறட்டை வரும் சமயம் அவர்களை பக்கவாட்டில் ஒருபுறமாக தூங்க செய்தால் குறட்டை வாராது என்றும் சொல்லுவார்கள்.  


குறட்டையில் பல சப்தங்கள் உண்டு. பிறர் தூக்கத்தை பாதிக்காதவரை அதனால் பிரச்சனை ஒன்றும் வாராது.


என் கணவரும் தூக்கத்தில் குறட்டை விடுபவர் தான். ஆனால் அது பெரியதாக என்னை பாதித்ததில்லை. ஆனால் தற்போது அவர் உடல் சுகவீனம் ஆனதால் அவர் மருந்துகள் உட்கொள்வதால் ஏனோ நாளுக்கு நாள் அவர் குறட்டை யின் சப்தம் அதிகமாவதுடன் அதில் சில நேரம் சங்கீததம், சந்தம் எல்லாம் வருகிறது. அதனால் என் உறக்கம் கெடுகிறது என்றாலும் அதை அவரிடம் அளவுக்கு அதிகமாக சொல்லி அதனால் அவர் மன வேதனை அடைவார் என்று நினைத்து நான் இதைப்பற்றி பெரிதாக அவரிடம் சொல்வதில்லை. ஆனால் அவரை கிண்டல் மட்டும் செய்வேன்.


 இப்படித்தான் ஓர் நாள் தூங்க போகும் முன் கிண்டலுக்காக நான் அவரிடம் "குறட்டை விடமாட்டேன் " என்று உறுதிமொழி எடுக்க சொன்னேன். அவரும் "ஆம். இனி குறட்டையை விடமாட்டேன் " என்று சொல்லி சிரித்தார். ஆனால் அதன் பொருள் விளங்காமல் முழிக்க, " ஆம். நான் குறட்டையை (கை) விடமாட்டேன்" என்று நக்கலாக தான் சொன்னதாக விளக்கம் சொல்ல, அவருடைய சொல் அறிவை பாராட்டினேன். 


எதை விட்டாலும் குறட்டையை விடாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவர் குறட்டை விடுவதை சுட்டிக் காட்டினேன். இது தெரிந்து வருவதல்ல. அறியாமல் செய்யும் செயலில் குறட்டையும் ஒன்றே!

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...