Thursday, February 26, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya



எவர் வெளிச்சத்தில்

எவர் ஒளிர்வர் 

எவரும் சுடரே!

எவருக்கும் பண்பால்

எவர் வரின் 

எவர் விலகுவர்

பெருந்தன்மையால் 

எவரும் நீடித்திருப்பதில்லை

எவருக்கும் இரவு

 பகல் உண்டு

எவராலும் எவரையும்

புறக்கணிக்க முடியாது

எவர் வழி விதியோ 

எவர் வழி செயலோ 

எவர் வழி சரியோ 

எவருக்கும் அறியாது 


 இருளிலும் ஒளிரும் இருவர் கூட்டணி

ஒருவர் இயற்கையின் மடியில்

இன்னொருவர் மனிதனின் பிடியில்


 வெண்ணிலாவின் ஒளியில் 

மஞ்சள் நிலா

இருவரும் ஒருமித்து ஒளிர கண்டேன்

காதலர் மனம் போலே 

ஒருவன் தானே வருவான்

ஒருவன் மனதில் எழும் காதல் போலே 

இன்னொருவன் வருவான்

சொன்ன காதலை ஏற்பது போலேன் தன்மை அதுவே

- Veena 

ஒன்றின் சுழற்சியை கட்டுப்படுத்த

 முடியும்,அதன் எல்லையை

 தாண்டினால் மறையும்...

மற்றொன்று உல்லாசமாக வலம்

 வரும்,எல்லையற்று பின்

 தொடரும்..

ஒன்றன் நிழலில் மற்றொன்று

இரண்டையும் பிடிக்க முடியா,அவை

 நம்மை பிடிக்க முடியும்!

- Vidhya 

 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...